ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிர்வாகப் பிரச்சினை?

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குச் சேவையாற்றி வரும் இந்த வைத்தியசாலையில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிரந்தர வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும் டொக்டர் வருண சம்பத், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு ‘மேலதிக கடமை’ (Cover-up duty) அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வைத்தியசாலையின் நிரந்தர நிர்வாகத் தலைவர் வாரத்தில் மிகக்கூடுலான நாட்கள் வேறொரு மாகாணத்தில் கடமையாற்றுவதால், இங்குள்ள நிர்வாக ஒழுங்குகள் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சுபைர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் வசித்து வருகின்றனர்.

ஏறாவூர் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரம் பயன்பாடின்றி உள்ளதுடன், அப்பகுதி தனவந்தர்கள் வழங்க முன்வந்த மேலதிக இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களைப் பொறுப்பேற்று இப்பிரிவைச் செயற்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுகின்றனர். பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் இண்மையால் இந்த வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கூடம் பயன்பாடின்றி மூடியே காணப்படுகிறது.

இதனால் அங்கிருக்கும் பெறுமதிமிக்க வைத்திய உபகரணங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 350 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) வரும் நிலையில், முறையான மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பலவீனம் காரணமாகச் சேவைகளின் தரம் மிக மோசமடைந்துள்ளது.

இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் உட்கட்டுமான அபிவிருத்திகளை தவிர எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. வைத்தியசாலையின் மேலதிக சேவைகள் அதன் முன்னேற்றம் ஆகியன வைத்திய அத்தியட்சகரின் முயற்சியிலும் அவருடைய வினைத்திறனான நிர்வாக செயற்பாடுளிலும் தங்கியுள்ளது.

ஏறாவூர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் இங்கிருந்து வைத்தியசாலையை முன்னேற்றவேண்டிய காலகட்டத்தில். கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அவரை சப்ரகமுவ மாகாணத்திற்குச் சென்று கடமையாற்ற பணித்திருப்பது இங்குள்ள மக்களுக்கு செய்யும் பாரிய அநியாயமாகும்.

ஒரு நிறுவனத்தினுடைய தலைவருக்கு Cover up Duty வழங்குவதாக இருந்தால் அவர் பணியாற்றுகின்ற மாவட்டத்தில் அல்லது அவருக்கு பக்கத்திலுள்ள நிறுவனங்களை வழங்குவது வழக்கமாகும். ஆனால் ஏறாவூர் வைத்தியசாலையில் இடம்பெற்றிருப்பது ஒரு புதுமையான வேடிக்கையான விடயமாகும்.

இது மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகிறது என சுபைர் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

எனவே, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முழுநேர நிர்வாக அதிகாரியை நியமித்து, தேவையான விசேட வைத்திய நிபுணர்களையும் நியமித்து இரத்த சுத்திகரிப்பு (Dialysis) பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைப் பிரிவினையும் உடன் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சுபைர் அந்தக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட