எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அந்த அரசின் பலவீனமாகும் – ராஜித சேனாரத்ன

எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது. மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் புதன்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையை கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகிறது.

இதனால் அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த நல்லெண்ணம் குறைரைடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஊழல் மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்கு திரும்பியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்தார்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாக தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்ததுபோல் செயற்படவில்லை.

அதனால் அரசாங்கத்தின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப்புலனாய்வுக்கு அழைத்து வருகிறார்கள். அரசாங்கத்திடம் தற்போது அடக்கு முறை மாத்திரமே எஞ்சி இருக்கிறது. அரசாங்கம் ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ள தீர்மானிப்பது என்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். இந்த அரசாங்கமும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கிறது.

அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் அவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

1200-675-27107872-thumbnail-16x9-chennaihc

ஏழைகளுக்கு ஒரு சட்டம், முக்கியப் புள்ளிக்கு ஒரு சட்டமா? – கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அப்புறப்படுத்துவதில் ஏழைகளுக்கு ஒரு சட்டம், செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு சட்டம் எனப் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

பரந்தூர் நிலங்களை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? – த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

August 26, 2026

சென்னை: விவசாயிகளின் நலன் கருதி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத்

nuw

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கு ஆபத்து?

August 26, 2026

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக

1200-675-27486870-thumbnail-16x9-nep-aspera

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: 37 பேரைத் தேடும் பணி தீவிரம் – மீட்பு நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய்!

August 26, 2026

சென்னை: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து

shi

உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

August 26, 2026

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

ranj

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!

August 26, 2026

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று

tn-governor-rv-arlekar

தமிழ் வழியில் பயின்றோருக்கான அரசுப் பணி முன்னுரிமைச் சட்டத் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல் – முக்கிய அம்சங்கள் என்ன?

August 26, 2026

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்திற்கு, ஆளுநர்

images - 2026-08-26T203933.756

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமா? – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்

nap

நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

August 26, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

sumanth

போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தாக்குதல்- சுமந்திரன் கண்டனம்

August 26, 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்

778985206_1660841362267297_6973912307882215986_n

கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலி

August 26, 2026

குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இன் று 26 .08.2026 இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு