நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவிக்கையில் தற்போது 85 – 100 இலங்கையர்கள் நேபாளத்தில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

நேபாளத்தில் திரிசூலி ஆறு திடீரென பெருக்கெடுத்தமையினால் வடக்கு ரசுவா பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் 400 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களில் 291 பேர் வௌிநாட்டவர்கள் என முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இலங்கையர்கள் எவரேனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்தும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

nap

நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

August 26, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

sumanth

போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தாக்குதல்- சுமந்திரன் கண்டனம்

August 26, 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்

778985206_1660841362267297_6973912307882215986_n

கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலி

August 26, 2026

குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இன் று 26 .08.2026 இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்

paw

திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

August 26, 2026

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு

hi

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

August 26, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது

Nirmala-Sitharaman-Ali-Sabry

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவி கிடைக்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய முக்கிய பங்கு: அலி சப்ரி வெளிப்படுத்திய தகவல்

August 26, 2026

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இந்திய நிதியமைச்சர்

nanda

இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

August 26, 2026

2022-ஆம் ஆண்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வேகமான மீட்சியடைந்து மீண்டும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்