ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

போதைப்பொருளை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மீதே தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதால், அந்த செய்தியை ஒளிபரப்பிய ஊடக நிறுவனத்தை அடக்குவதற்கு பொலிஸார் செயற்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் பொலிலாரின் நடவடிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன் கட்சி காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

திருடர்களை கண்டுபித்து தண்டனை பெற்றுக்கொடுக்க அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வத்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த திருடனையும் பிடிக்கவில்லை. அவர்களால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதை மறைப்பதற்காக 1990 காலப்பகுயில் இருந்து தலைதூக்கி வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு, அதனை முழுமையாக ராஜபக்ஷவினர் மீது குற்றம் சுமத்த நடவடிக்கை எடுத்தார்கள்.

ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவது தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்பது மக்கள் முன்னிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று நாட்டில் போதைப்பொருள் விநியோகிப்பது. தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்தான் என்பதும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் மத்தியில் இறுதியாக இந்த நாட்டில் கஞ்சா செடி வளர்ப்பதும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனால் தற்போது அரசாங்கத்தின் பால் திரும்பியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தானது என தெரிவிக்கப்படும் காணியில் கஞ்சா செடி வளர்த்துவருவது தொடர்பான தகவல் வெளிவந்ததுடன் அதனை தனியார் ஊடகம் ஒன்று ஒளிபரப்பி இருந்தது.

இவ்வாறு ஒளிபரப்பியதற்கு எதிராக பொலின் திணைக்களம் குறிந்த ஊடக நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான காணியில் கஞ்சா பபிருடுவதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயத்தை ஒளிபரப்பியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனல் குறித்த ஊடக நிறுவன செய்தி ஒளிபரப்பின்போது சம்வத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்த வாக்குமூலத்தையே ஒளிபரப்பி இருந்தது.ஆனால் அந்த ஒளிப் பதிவை இலங்கை பொலிசார் வெளிப்படுத்தாமல் மறைத்துள்ளனர் அதனையே குறித்த ஊடகம் வெளிப்படுத்தி இருந்தது. அம்பந்தோட்டையில் ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது பொலிஸார் அதனை முழுமையாக ஒளிப்பதிவு செய்து ஊடங்கங்களுக்கு வெளியிட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

ஆனால் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதை பொலிஸாரே ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அவர்கள் மறைத்தார்கள். ஆனால் குறித்த தனியார் ஊடகம் அந்த ஒளிப்பதிவை வெளியிட்டு, மக்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையை பாதுகாத்து இருக்கிறது. அதற்காக அந்த வாடக நிறுவனத்துக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோன்று குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பொலிலாரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொளிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலே அவர் ஆரம்பத்தில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருத்தார்.

அவ்வாறு இல்லாமல் பொயிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த பேருக்கு தனியாக இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிமார் தெரிவிப்பதாக இருத்தால், அதனை நம்புவதற்கு இந்த நாட்டு மக்கள் தயாராக இல்லை.

பொரிஸ் அதிகாரிதான் தாக்குதல் நடத்தி பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருந்தால்.அவருக்கு துணைபோன வைத்தியசாலை அதிகாரிகளும் வைத்தியரும் அதற்கு சம்பந்தப்பட வேண்டும்.

அதனால் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸாக செயற்படுவதற்கு பதிலாக மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸாக செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகிறது. அதனால் உண்மை தகவல்களை மறைத்து செயற்படும் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

By C.G.Prashanthan

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்