உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று (21) ஆகிய மூன்று தினங்களில் மொத்தமாக தங்கத்தின் விலை சுமார் 29,000 ரூபாவால் குறைந்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி 13,000 ரூபாவாலும், நேற்று (20) 6,000 ரூபாவாலும் விலை வீழ்ச்சியடைந்திருந்ததுடன், இன்றைய தினம் மேலும் 10,000 ரூபாவால் விலை குறைவடைந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தமையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய கிழக்கு போர் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளமை மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ளமை போன்ற காரணிகள் தங்க விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை தற்காலிகமானது எனவும், எண்ணெய் விலை ஸ்திரமடைந்த பின்னர் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

5

நாட்டின் 9 மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைகள்!

March 21, 2026

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

dd

பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

March 21, 2026

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை

ve

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

March 21, 2026

675க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்

bi

கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து

March 21, 2026

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில்

photo-collage.png

இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம்; புத்தளம் இளைஞர் யுவதிகள் வடமராட்சியில்

March 21, 2026

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் கீழ் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில்

Peel

மிசிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துக்கள் குறித்து உதவியை நாடும் காவல் துறை

March 21, 2026

பீல் பிராந்தியம் – 11 பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு (CIB) அதிகாரிகள், மிசிசாகாவில் இடம்பெற்ற இரண்டு தீ வைத்த

WhatsApp Image 2026-03-21 at 16.55.44 (1)

பிராம்ப்டனில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்கான தகவல் அமர்வு

March 21, 2026

​​பிராம்ப்டன், மாநகராட்சி விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பிராம்ப்டன் நகரம் 2026 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள்

ghh

அமெரிக்காவிற்குள் கனடாவிலிருந்து மனிதக் கடத்தல் செய்தவர் கைது

March 21, 2026

கனடாவிலிருந்து நயாகரா ஆறு வழியாக ஒரு குடும்பத்தினரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து சென்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 27 வயது

sajith-2

கட்சி தாவும் அரசியலையும் டொலர்களுக்கு நிலைமாறும் அரசியலையும் இப்போதைய சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை

March 21, 2026

தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தத் தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள்

is

எரிவாயு உற்பத்தி மையங்கள் வளைகுடாவில் தாக்கப்படுகின்றன!

March 21, 2026

அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு

Elon

அமெரிக்க நீதிமன்றம் எலோன் மஸ்க் இற்கு எதிராக தீர்ப்பு

March 21, 2026

ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலோன் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Anu

ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

March 21, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின்