உலகம் எதிர்கொண்டுள்ள புதிய நெருக்கடிகள்; இபோலா மற்றும் ஹண்டா வைரஸ்கள் குறித்து WHO தலைவர் அறிக்கை!

ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, ‘அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்’ ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் காங்கோவில் ஏற்பட்டுள்ள புதிய இபோலா பரவல் குறித்து கருத்து தெரிவித்ததுடன், கடந்த வார இறுதியில் அதனை ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் இருந்து பதிவான அரிய வகை ஹண்டா வைரஸ் பரவல் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த இரு வைரஸ்களினதும் பரவலானது “நமது பிரச்சினைகள் நிறைந்த உலகின் புதிய நெருக்கடிகள் மட்டுமே” என்று கூறினார்.

“உலகளாவிய மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் நிதி வெட்டுக்கள் நிறைந்த, கடினமான, ஆபத்தான மற்றும் பிளவுகள் உள்ள ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா விலகியமை மற்றும் பெருமளவிலான நிதி வெட்டுக்கள் காரணமாக உலக சுகாதார அமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ள பின்னணியிலேயே, இந்த 2026 உலக சுகாதார பொதுச் சபை கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து சுகாதார அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர், உலக சுகாதார அமைப்பின் வரவுசெலவுத் திட்டம் 21% அதாவது சுமார் ஒரு பில்லியன் டொலர்களால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டு திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த அவசர நிலைக்கு மத்தியிலும் உலக சுகாதார அமைப்பினால் ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பட்டதாரி நிறுவனத்தின் உலகளாவிய சுகாதார மையத்தின் இணை இயக்குனர் சூரி மூன் சுட்டிக்காட்டுகையில், உலக சுகாதார அமைப்பு இந்த கடினமான காலப்பகுதியை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஹண்டா வைரஸ் நெருக்கடி மூலம், உலகிற்கு மிகவும் பயனுள்ள, நம்பகமான, நடுநிலையான மற்றும் நிலையான நிதியுதவியைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தேவை மிகத் தெளிவாகப் புலப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது