கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney)விரைவில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர கசப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் நிகழவுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து, கலந்துரையாடியிருந்தனர்.
அப்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்யும்படி இந்தியப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை மார்க் கார்னி ஏற்றிருந்தார்.
எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 50 பில்லியன் டொலராக உயர்த்த இரு நாட்டுத் தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.