உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விடயத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை – சானக்க பண்டார

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர வீட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இவரின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணையில் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பு வெள்ளிக்கிழமை (3) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்தும் உதய கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டுக்கு, ராஜபக்ஷ்வினருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களும் அதில் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்து தற்போது ஒருவருடம் ஆகியுள்ளது. ஆனால் ஜனாதிபதியால் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது.

இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆளும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக செயற்பட்டவர். அப்படியானால் இந்த தாக்குதல் தொடர்பில் பொறுப்பு அவருக்கு இல்லையா என கேட்கிறோம். அதேபோன்று குற்றப்புலனாய்வு பிரிவின் அப்போதைய பிரதிப் பணிப்பாளருக்கு இல்லையா என கேட்கிறோம். ஆனால் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் என அன்று சரத் வீரசேகரவும், விமல் வீரவன்சவும் தெரிவித்தார். அதனையே தற்போது உதய கம்மன்பிலவும் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் வெறும் நாடகமாகும். இந்த நாடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.

அதனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதிக்கு அதனை கடந்த ஏப்ரல் மாதம் செய்ய முடியாமல் போனது. அதனால் அவர் இந்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சூத்திரதாரியை வெளிப்படுத்தவில்லை என்றால், குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து ஷானி அபேசேகர வீட்டுக்கு செல்ல வேண்டும். பிரதி பொலிஸ் மா அதிபரும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதேநேரம் இந்த தாக்குதலை தடுக்க தவறிய ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு பிரின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரையும் கைது செய்ய வேண்டும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர எப்போதும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகிறார். அதனால் இவரின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணையில் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை என்றார்.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்