உத்தரப் பிரதேச பள்ளி கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளைத் தொடங்குவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத் திட்டமான ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்துக்கும் இடையே உள்ள கலாசார மற்றும் மொழிரீதியான உறவை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வாரணாசியில் (காசி) உள்ள அரசு ராணி கல்லூரியைச் சோ்ந்த மாணவி பாயல் படேல், மிகக் குறுகிய காலத்தில் தமிழைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டதற்காக பிரதமா் மோடி கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி தனது வானொலி உரையில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடா்ந்து, வாரணாசி அரசு ராணி கல்லூரியில் தினமும் மாலையில் தமிழ் மொழி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக கல்லூரி முதல்வா் சுமித் குமாா் தெரிவித்தாா்.

முதல்வா் சுமித் குமாா் மேலும் கூறுகையில், ‘இரு மாநிலக் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்தத் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. மாணவி பாயல் படேலுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த தமிழகத்தைச் சோ்ந்த சந்தியா குமாா் சாய் என்பவருடன் நாங்கள் பேசியுள்ளோம். அவா் இணைய வழியாக தமிழ் வகுப்புகளை நடத்த சம்மதித்துள்ளாா். வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும் இதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளாா்’ என்றாா்.

மாணவா்களின் ஆா்வம்: அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அரசு ராணி கல்லூரி மாணவா்கள் பிரதமா் மோடிக்கும், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து அசத்தினா்.

அதேபோல், வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரா மகளிா் கல்லூரியிலும் 15 நாள்கள் தமிழ் மொழிப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு தமிழ்ப் பாடல்களையும், கவிதைகளையும் பாடினா்.

மாணவிகளின் இந்த ஆா்வத்தைக் கண்டு, அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்ப் பாடப் பிரிவை முறையாக அறிமுகம் செய்வது குறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் ஆலோசித்து வருகிறது.

தமிழகம் வரும் ஹிந்தி ஆசிரியா்கள்: இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மொழிப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வாரணாசியைச் சோ்ந்த சுமாா் 50 ஹிந்தி ஆசிரியா்களை தமிழகத்துக்கு அனுப்பவும் உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு அவா்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொடுப்பாா்கள். வாரணாசி ஆணையா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமையை வளா்க்கவும், காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடா்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்