துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்திலிருந்து திடீரென புகை வெளியேறியதால் குறித்த விமானம் ருமேனியா தலைநகரான புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இவ்விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.
அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.