இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர் முஸாலியா முதவாடிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், வர்த்தகக் கூட்டாண்மையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறையில் பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இணக்கம் காணப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு மேடைகளில் இலங்கை மற்றும் கென்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பானது ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவின் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.