இலங்கை முதியோரில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளோடு உள்ளனர்!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார்.

இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ‘மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ் மேலும் தெரிவித்தார்.

சில வேளைகளில் வயது முதிர்வின் போது ஏற்படும் சில மனநோய் அறிகுறிகள் குறித்து மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க சமூகம் தூண்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு சாதாரண நிலைமையாகக் காண்பித்து வருவதாகவும் குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ், மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய் அறிகுறிகளைப் புறக்கணிக்க முதியவர்கள் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக முதியோர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக உடல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய மனநல காப்பகத்தில் 1999 ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளதாகவும், அண்மையில் ‘தீகாயு’ எனும் பெயரில் பகல்நேர சிகிச்சை நிலையம் ஒன்று உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ur

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

April 17, 2026

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று

heat

உச்சம் தொடும் வெப்பம்

April 17, 2026

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என

le

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

April 17, 2026

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள்

ben

லக்னோவை வென்ற பெங்களூர்

April 17, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Cana_Ard

கனடாவால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது ஆர்டெமிஸ் II – விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன்

April 17, 2026

நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவுப் பயணத்தில் தனது பங்களிப்பானது, கனடா ஒரு நாடாக

6

அம்ஹெர்ஸ்ட் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

April 17, 2026

நோவா ஸ்கோடியா (N.S.), அம்ஹெர்ஸ்ட் நகரில் இந்த வார தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர்

le

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!

April 17, 2026

இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. கால எல்லை: இந்த

ci

சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது அவதூறுப் பரப்புரை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு

April 17, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக

thva

வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டை அழிப்பதற்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் எடுக்கப்படும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – தவபாலன்

April 17, 2026

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய

ra

இன்றும் மழை

April 17, 2026

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே

arrest

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

April 17, 2026

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட

lal

விவசாய அமைச்சர் லால்காந்தவிற்கு 6.7 கோடி பெறுமதியான சொத்துக்கள்!

April 17, 2026

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து