இலங்கையில் வறுமையினை ஒழிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது – ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்

சமூக சக்தி – பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் முதலாக ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைவதாக “பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்” நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (02.06.2026) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்  தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களில் மிக முக்கியமான வேலைத் திட்டமாக வறுமையினை ஒழிக்கும் சமூக சக்தி வேலைத் திட்டம் விளங்குவதாகவும், அரசாங்கத்தினால் வறுமையை குறைத்து, வாழ்வாதாரத்தினை உயர்த்தி மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்தினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
மேலும்,  சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலில் – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சக்தி தலைவர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வறுமையினை ஒழிக்க பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மூன்று பிரதான கொள்கைகளில் ஒன்றான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், அடுத்து டிஜிற்றல் மயமாக்குதல் மூலம் ஊழல் ஒழிப்பு மற்றும் கணினி மயப்படுத்திய வேலைத் திட்டங்கள் நடைபெறுவதாகவும், அடுத்து வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமாக சமூக சக்தி வேலைத் திட்டம் இன்றைய தினம் நாடு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கையில் வறுமையானது அண்ணளவாக 12% ஆகவுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் புள்ளிவிபர ரீதியாக 24% காணப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 20% வறுமை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், சண்டிலிப்பாய் பிரதேசத்திலும் வறுமை அதிகமாகவுள்ளதாகவும், எல்லா மக்களையும் சமமாக கருதி அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணமானது கல்வி, கலை, கலாசார பண்பாடுகளுக்கு முதன்மையாக விளங்குவதாகவும், தற்போது எமது பிரதேசத்தில் போதைவஸ்து, பல குழுக்களின் குற்றச் செயல்கள் அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தி மாபியாக்களை ஒழிக்க எமது அரசாங்கம் பல்வேறு வழிகளில் போராடிவருவதாகவும், அதனை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும், சண்டிலிப்பாய் பிரதேசத்தினை வறுமை அற்ற பிரதேசமாக மாற்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், எமது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தினால் எமது நாட்டிற்கு பாரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்பன ஏற்பட்டாலும், அரசாங்கமானது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், புலம்பெயர் மக்கள் மற்றும் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து “வளமான நாட்டை” உருவாக்க பங்களிப்புக்களை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து