இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் – பிரிட்டனில் கலந்துரையாடல்

தமிழர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வென்றெடுக்க உழைப்போம் – தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உறுதி

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை அக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி இக்கூட்டத்தில் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவராக டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

அதேபோன்று பிரதித் தலைவர்களாக உமா குமாரன், பொபி டீன், லூயி பிரென்ஞ் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதேவேளை இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் என்பன உள்ளடங்கலாக கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மரபணு பரிசோதனைக்கான (டி.என்.ஏ) தரவு வங்கி உருவாக்கல் திட்டம், சர்வதேச நீதிமன்றம் அல்லது ஏனைய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைகளை நாடுவதற்கான வழிமுறைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கததின் அரசியல் போக்குகள் மற்றும் இன்னமும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் வலுப்படுத்தல், இந்தியாவில் இடம்பெற்றுவரும் தெளிவூட்டல் முயற்சிகள், வடக்கு – கிழக்கு மக்களுக்கான இழப்பீடு, மீள்குடியேற்றம், மீளக்கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும், நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தினர்.

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்

1200-675-26085949-thumbnail-16x9-2

“விஜய் சிஎம் ஆவதைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி வைக்கப் பார்த்தன!” – தேர்தல் ரகசியத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்!

May 24, 2026

விருதுநகர்: “வாக்கு எண்ணிக்கை நாளன்று டெல்லி பாஜக-வின் உத்தரவின்படி, நடிகர் விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் இணைந்து

dt-next_import_imported_import_Articles_2019_Mar_201903190359578020_Thirunavukkarasar-hunts-for-Tiruchy-address_SECVPF

“திமுக-வினர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது!” – கூட்டணி மோதல் குறித்து திருநாவுக்கரசர் நாகரிக தாக்கு!

May 24, 2026

சென்னை: “கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படுவதும், கட்சிகள் பிரிவதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிய அதிசயம் அல்ல; இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து