இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை!

இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியாக விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்படும் ‘மௌபிய’ கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தவறான செய்தியை சமூகமயப்படுத்தியுள்ளார்கள். இந்த கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இராணுவ வீரர் ஒருவரின் பெற்றோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் இராணுவத்தால் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததன் பின்னர் மரண சான்றிதழை இராணுவத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது அறிவித்தல் குறித்த பயனாளர்களின் குடும்பத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பெற்றோர் உயிரிழந்ததன் பின்னர் தகவல் வழங்கும் வீதம் மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் அவர் சார்ந்த கொடுப்பனவுகளை பிறிதொருவர் முறையற்ற வகையில் பெற்றுக்கொள்வது அரச நிதி முறைகேடாக கருதப்படும்.

இராணுவத்தினரது பெற்றோருக்கான ‘மௌபிய’ கொடுப்பனவு தொடர்பில் வருடத்தில் இரண்டு முறை தகவல் கோரப்படும். கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர் உயிருடன் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகவல் கோரப்பட்ட போதும் முழுமையான விபரங்கள் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இராணுவ சேவை பிரிவு குறித்த கொடுப்பனவை விடுத்துள்ளது.

இராணுவத்தினரது பெற்றோருக்கான கொடுப்பனவை இடைநிறுத்த எவ்வித தீர்மானத்தையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை. ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினரதும் அவர்களின் குடும்பத்தினரினதும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

ஊடக சுதந்திரம் பொய்யுக்கு இடமளிக்காது – சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்

நாட்டில் தீ மூட்டுவதற்வோ, பொய்யில் அரசியல் செய்யவோ எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்க கூடாது. ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம். ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா? கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

பொதுமக்கள் பொலிஸ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்,

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உரையாற்றிய சபை முதல்வர், பொலிஸ் பதிவுகளை பெறும் போது சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றுநிருபங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பலமுறை சபையில் குறிப்பிட்டு, விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். நாட்டில் தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கவோ, ,பொய்யில் அரசியல் செய்யவோ முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏதேனும் உதாரணங்களை காட்டி கூறலாம். ஆனால் அமைச்சர் இங்கு பொறுப்புடன் அதுபற்றி பாராளுளுமன்றத்தில் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் உங்களின் பதவியுடன் நீங்கள் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படலாம். தயவு செய்து பொய்கூற வேண்டாம். மக்களே இதனால் பாதிக்கப்படுவர். உங்களுக்கு அரசியல் இலாபம் கிடைக்கலாம். அதற்காக இல்லாத விடயங்களை குறிப்பிட வேண்டாம்.

பொதுமக்களுக்கு நற்சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சிவில் பாதுகாப்பு குழுக்களிடம் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். உங்களுக்கு இதில் இன்னும் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமைச்சருடன் கலந்துரையாட முடியும். இந்த நாட்டை பொறுப்பேற்கவுள்ளவர் என்றுதானே கூறுகின்றீர்கள். இந்த நிலைமையில் எப்படி உங்களிடம் நாட்டை ஒப்படைப்பது.

இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம்.ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா, கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் வேண்டுமென்றால் ஊர், பெயர் விபரங்களுடன் தகவல்களை முன்வைக்கின்றேன். அக்மிமன மற்றும் கம்புறுப்பிட்டிய பொலிஸ் நிலையங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் செல்லும் போது இவ்வாறு நடக்கின்றது என்பதனை நான் உண்மையாகவே கூறினேன். இதில் பொய்கள் ஏதும் இல்லை என்றார்.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

April 29, 2026

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி

(c)PragMatrix

புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

April 29, 2026

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக

1200-675-26574451-thumbnail-16x9-murder-case

நங்கநல்லூரில் பயங்கரம்: மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் த*ற்கொ*லை!

April 29, 2026

சென்னை: ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகத் தொழில் அதிபரான மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட

screenshot76476-1683464956

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு – கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 700+ பேருந்துகள் இயக்கம்!

April 29, 2026

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்

1200-675-26438077-thumbnail-16x9-alangulam (2)

விவசாயி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஐகோர்ட் கிளையில் தென்காசி சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்!

April 29, 2026

மதுரை: தென்காசி அருகே விவசாயி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சப்-கலெக்டர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி

1777353517-4676

“திருச்செந்தூர் டூ ஷீரடி” – முருகன் தரிசனத்தைத் தொடர்ந்து இன்று சாய் பாபாவைத் தரிசிக்கிறார் விஜய்!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்

cid

திறைசேரி கட்டமைப்புகளை இணையவழிக் குற்றவாளிகள் விஞ்சியுள்ளனர்- குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தகவல்

April 29, 2026

இலங்கை திறைசேரியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இணையவழிக் குற்றவாளிகள் (Cybercriminals) திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

1774580829_1773905291_lpg-2026-03-898ee012cc2797ad78241ce4e3a253f7-1200x800

சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கியது: சிலிண்டர் விநியோகக் காத்திருப்பு காலம் 5 நாட்களாகக் குறைப்பு!

April 29, 2026

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக

retd-judge-kirubakaran-2026-04-28-17-07-51

“என் கட்சி தோற்றால் த*ற்கொ*லை செய்வேன் என்பதா?” – சமூக வலைதளப் பதிவுகளால் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கடும் வேதனை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில கட்சியினர் பதிவிடும் கருத்துக்கள்

768-512-19605272-thumbnail-16x9-tamili

“4-ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும்” – செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பதிலடி!

April 29, 2026

திண்டுக்கல்: “தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறிய

1c7086d0-00b2-11ef-8fbb-975a5f7e9af9.png

கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் இன்று மதுரை புறப்படுகிறார் அழகர்!

April 29, 2026

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்குகிறது. சைவ,

puthiyathalaimurai_2026-04-24_g3n952sd_se-4

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளின் தலைவிதியைத் தீர்மானிக்க 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம்