இன்று இரவு 8.30 – 9.30 வரை ‘புவி மணித்தியாலம்’

இவ்வாண்டின் ‘ புவி மணித்தியாலம்’ நாளை 28ம் திகதி இரவு 8.30 முதல் 9.30 வரை கொண்டாடப்படவுள்ளது. நாங்கள் வாழும் எங்கள் பூமியைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இந்த புவி மணித்தியாலம் கொண்டாடப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

இவ்வாண்டு புவி மணித்தியாலம் சக்தி நுகர்வைக் குறைத்தல், காலநிலை அவசரநிலையை முன்னிலைப்படுத்துதல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை முன்வைத்து புவி மணித்தியாலம் கொண்டாடப்படவுள்ளது.

நாங்கள் வாழும் பூமியே எமக்கு யாவற்றையும் தருகின்றது. எமக்கான நீர், எமக்கான வளி, எமக்கான உணவு போன்ற எமக்கான எல்லாவற்றையும் நாம் எமது பூமியில் இருந்தே பெற்றுக் கொள்கின்றோம்.

எமக்காக எங்கள் பூமி கடந்த 05 பில்லியன் ஆண்டுகளாக ஒரு கணமேனும் ஓய்வின்றி உழைக்கின்றது.

அளவற்ற நன்மைகள் யாவற்றையும் தருகின்ற பூமிக்கு நாம் செய்வது முழுவதும் துன்பமே…

பூமியை அழிக்கவும், அதனைத் துன்புறுத்தவும் நாமெல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றோம்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் பூமியை நிறைத்து, காடுகளை அழித்து, இரசாயன நச்சுக்களால் நிலத்தையும், நீரையும், வளியையும் நஞ்சாக்கி அவற்றுக்கு துன்பம் செய்கின்றோம்.

பூமி உருவாக்கிய நிலத்தை என்னவோ, நாமே உருவாக்கியது போல் கோடிகளில் விற்கின்றோம். பூமி உருவாக்கிய நீரை நாமே உருவாக்கியது போல் விற்பனை செய்கின்றோம். வெகு விரைவில் வளியையும் விற்பனை செய்வோம்.

பூமியோடு இணையாத எங்களின் வாழ்வு நரகமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

எங்களின் சித்திரவதை தாங்காமல் பூமியும் சிறிய அளவில் தன் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது. இயற்கை அனர்த்தங்களாக, காலநிலை மாற்றமாக, பூமி தன் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது.

பூமியின் அதிருப்தி கோபமாக மாறுமுன் அதனை சாந்தப்படுத்துவது எங்கள் கடமை.

இந்தக் கடமையின் ஒரு பகுதியாக நாளைய புவி மணித்தியாலத்தைக் கொண்டாடுவோம்.

ஆகவே நாளை இரவு 8.30 முதல் 9.30 மணி வரையான ஒரு மணித்தியாலம் எங்கள் பயன்பாட்டிலுள்ள சகல மின்சாதனங்களையும் நிறுத்தி எங்கள் பூமியை கௌரவிப்போம். குறிப்பாக மின் விளக்குகள் யாவற்றையும் நிறுத்திவைப்போம். இந்த ஒரு மணித்தியாலம் மின்சார பயன்பாட்டை நிறுத்தி எங்கள் பூமியை பாதுகாப்போம்.

இந்த ஒரு மணித்தியாலம் மிக அத்தியாவசியமான தேவை தவிர அனைத்து போக்குவரத்துகளையும் நிறுத்துவோம்.

மேற்கூறிய இரண்டு செயற்பாடுகளின் ஊடாகவும் அதிக சக்தியை குறிப்பாக பெற்றோலியத்தை நாம் நுகர்கின்றோம்.

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்

arrest-1

10 லட்சம் ரூபாய் வங்கி மோசடி: போலி இணையதளத்தை உருவாக்கிய இளைஞர் கைது

April 21, 2026

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்