இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (15) பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எமது எரிபொருள் ஓடர்கள் (Orders) வழமை போன்று கிடைத்து வருகின்றன. எனவே, அடுத்த மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. இன்று காலை முதல் QR முறை நடைமுறைக்கு வந்தபோது இணையதளங்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம்.

அதனால் மக்கள் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்றனர். ஆனால் தற்போது அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன.

எனவே, மக்கள் இனி வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நுகர்வோருக்குத் தேவையான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்பட்டு, அவை எரிபொருள் நிலையங்களில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதனை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து எரிபொருள் வழங்க முடியும். எனவே, எவரும் QR முறைக்கு புறம்பாக எரிபொருளைப் பெற வேண்டிய அவசியமில்லை.

இதனை உறுதிப்படுத்தப் பொலிஸார் தலையிடுவதுடன் தேவையற்ற முறையில் வரிசைகளில் நிற்பவர்களுக்கு இனி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.

அதேபோல், எரிபொருள் நிலையங்களுக்கு நாம் வழங்கிய எரிபொருள் அளவுக்கும், QR ஊடாக விநியோகிக்கப்பட்ட அளவுக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு வழமை போன்று இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) ஊடாக எரிபொருள் வழங்கப்படும்.

அவர்களின் பயணத் தூரம் மற்றும் தினசரித் தேவைக்கேற்ப எரிபொருள் அளவு கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப QR ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும்.

அத்துடன், மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளையும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

45666

கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

March 15, 2026

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி

leba

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

March 15, 2026

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

56699

சாரதிகள் கடும் அவதி

March 15, 2026

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்

acc

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

March 15, 2026

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு

popp

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

March 15, 2026

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து

4555

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

March 15, 2026

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

hea

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ,

ha

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்

March 15, 2026

027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

fff

போதைப்பொருளுடன் பயணித்த படகு ஒன்று கண்டுபிடிப்பு

March 15, 2026

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

GMOA

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

March 15, 2026

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

arr

இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

March 15, 2026

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு

pon

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

March 15, 2026

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான