இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல்

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அயல்நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற உறவு முறைகள் மற்றும் பொருளாதார உதவிகள் பற்றி ஹரிணி சீன ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளார். முக்கியமாக பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தமது அக்கறையை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஹரிணியிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் எதுவும் இல்லை.

சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்துள்ள ஹரிணி அமரசூரிய, அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு ஏற்புடைய, சீன முதலீடுகள் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களும் பேசப்படடதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதியை நேற்றுச் செய்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் சந்தித்து உரையாடியபோது இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகரங்கள் பற்றிய அலசி ஆராய்ந்தாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அதிகாரபூர்வமாக சந்திப்பு பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சந்திப்பு இடம்பெற்றதாகவும் சீன – இலங்கை உறவு பற்றி விரிவாக ஆராயப்பட்டது என்றும் குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு பற்றிய விடயங்களில் சீன அரசு உதவி வழங்குகின்றமை பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக – பொருளாதார, கடல்சார் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (Belt and Road) திட்டத்தின் கீழ், சீன – இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டாக அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவுடன் இலங்கை நெருக்கமாக உறவை பேணிவருவதாக பிராந்திய மட்டத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை சீனாவுடன் மீண்டும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை பிரதமர் ஹரிணி முன்னெடுத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஹரிணியின் சீன பயணம் தொடர்பாக சீன ஊடகங்களும் முக்கியத்துவம் வழங்கியுள்ளன.

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை

ma

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

November 18, 2025

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும்

ba

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

November 18, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும்

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்