இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்ட அமுலாக்க அமைப்புகள் அண்மையில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்த அதேவேளை, குறித்த நபர்களில் சீனப் பிரஜைகளும் அடங்குவது குறித்து சீனா கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுடன், சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கடுமையாக எதிர்கொள்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய உலகில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வழி மோசடிகள் வேகமாக வளர்ந்து பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், அது ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், சீனா, மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மோசடிகளை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பல குற்றக் குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கைகளின் பின்னர் சில குற்றவாளி குழுக்கள் தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேம்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, சாதகமான புவியியல் அமைவு, மற்றும் விசா விதிமுறைகளின் தளர்வு போன்ற காரணங்களால் சில மோசடி கும்பல்கள் இலங்கையை தங்களின் செயல்பாட்டு மையமாக பயன்படுத்தி வருவதாக சீனத் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சீனப் பிரஜைகளை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, சீன அரசு இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இணைந்த விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில் மோசடிகளில் ஈடுபட்டிருந்த பல சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் அவர்களை கட்டம் கட்டமாக சீனா நோக்கி நாடுகடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனா மற்றும் இலங்கை நீண்டகால நட்பு உறவை கொண்ட நாடுகளாக இருப்பதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவு வழங்கி வருகின்றன.

எதிர்காலத்திலும் எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களை, குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை எதிர்க்க இணைந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பு முயற்சிகள், இரு நாடுகளின் மக்களின் பாதுகாப்பையும் சொத்துக்களையும் காக்கும் விதமாகவும், இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் சூழலை உருவாக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது

Gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

March 18, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

chal

இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

March 18, 2026

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று

da

ஒன்டாரியோவில் Canada Goose இன் செயற்பாடுகள் – முதல்வர் டக் பேர்ட்

March 18, 2026

புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி