சென்னை
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் உயர்கல்வித் துறையின் சர்ச்சை சுற்றறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, இடதுசாரிகளைத் தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
https://x.com/Shanmugamcpim/status/2090459884760486369/video/1
சர்ச்சைக்குரிய இரு சுற்றறிக்கைகள்:
-
வட்டாட்சியர் உத்தரவு: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியிட்டார். கடும் எதிர்ப்புக்குப் பின் இது திரும்பப் பெறப்பட்டது.
-
உயர்கல்வித் துறை சுற்றறிக்கை: இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதுவும் பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அமைச்சரின் விளக்கமும் சண்முகத்தின் நிராகரிப்பும்:
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், “மாணவர்களின் போராட்ட உரிமையைக் கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை; தவறுதலாகச் சில கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுவிட்டன,” என விளக்கமளித்தார். ஆனால், இந்த விளக்கத்தைக் கடுகளவும் ஏற்க முடியாது என பெ.சண்முகம் 8 நிமிட வீடியோவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெ.சண்முகம் முன்வைத்த அதிரடிக் கேள்விகள்:
-
பாஜக, திமுக, அதிமுக எனப் பல கட்சிகளுக்கு மாணவர் அமைப்புகள் உள்ள நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டும் கண்காணிக்கச் சொல்வது ஏன்? இதன் மூலம் இடதுசாரிகளை ஒடுக்கும் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
-
சுற்றறிக்கைகளைத் திரும்பப் பெற்றுவிட்டதாலோ அல்லது இடமாற்றம் செய்துவிட்டதாலோ பிரச்சினை முடிந்துவிடாது; உத்தரவிட்ட வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன தடை செய்யப்பட்ட இயக்கங்களா? இதற்கு மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை மற்றும் கல்வித்துறை என அனைவரும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
அதிகாரிகள் செய்யும் தவறுகள் இறுதியில் அரசுக்கே வந்து சேரும் என்பதால், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக ஒழுங்குபடுத்தி நல்வழியில் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
#CPIM #Shanmugam #Leftists #TVKGovernment #ChiefMinisterVijay #HigherEducationDept #TahsildarIssue #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates