ஆளும் தரப்பினர் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் – சஜித் சாடல்!

ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில் காணப்பட்டு வரும் பௌதீக மற்றும் மனித வளங்கள் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து, காலத்துக்கு ஏற்றால் போல் நவீன இற்றைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்பக் கல்வி, ஆங்கில மொழி மற்றும் பிற மொழி அறிவு உள்ளிட்ட கல்வியை, சிறுவயதிலிருந்தே வழங்குவதற்கே பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வந்தோம். அன்று “பிரபஞ்சம்” வேலைத்திட்டங்களைப் பார்த்து பரிகசித்த தற்போதைய ஆளும் தரப்பைச் சோர்ந்தோர், இன்று பாடசாலைகளை மூடும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அன்று பிரபஞ்சம் திட்டத்தைப் பார்த்து சிரித்தவர்கள், இன்று அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு நாட்டை ஆட்சி செய்தாலும், நாட்டின் கல்வித்துறைக்காக எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. கல்வியில் காணப்பட்டு வரும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கு நாம் பிரபஞ்சம் திட்டம் ஊடாக நடவடிக்கை எடுத்தோம். பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக, பாடசாலைகளை மூடும் திட்டங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நொச்சியாகம, துணுமடலாவ, புராண ஸ்ரீ போதிருக்கராம விகாரையில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் என்னால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது. ஜனாதிபதி பதவியையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் வைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தபாடில்லை. திட்டமிட்ட வகையில் பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு நாம் இடமளிக்க முடியாது. இதற்காக வேண்டி எதிர்க்கட்சி முடயுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும்.

அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கத்தக்க, ​​மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர். தலைநகரில் உள்ள செல்வந்தர்களைத் தொடர்பு கொண்டு, கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பாடசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். பாகுபாடு இல்லாமல் பாடசாலைகளைப் பாதுகாக்க அமைதியான முறையிலும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆசிரியர் பற்றாக்குறையை உருவாக்கி, பிள்ளைகளை அரச பாடசாலைகளிலில் இருந்து நீக்கி, பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டு மக்களை நெருக்கடிகளுக்கு ஆளாக்கும் இந்த அரச கொள்கையை எதிர்க்க நாம் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை