அவுஸ்திரேலியாவில் ஒருவரைத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த இளைஞன் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து, ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் அவரை தாக்கியுள்ளனர்.

இதன்போது, இருவரும் இணைந்து அந்த நபரின் முகம் மற்றும் தலையில் பலமுறை தாக்கியதுடன், அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, மூடப்பட்டிருந்த கதவுகளின் வழியாக அவரை இழுத்துத் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவரின் பையைப் பறிக்க முயன்றபோது, 22 வயதான இளைஞன் கண்ணாடிப் பொருளொன்றால் அவரது தலையில் பலமாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய நிலையில் சிகிச்சை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 22 வயதான இளைஞன் தற்காப்புக்காகவே தாக்கியதாக வாதிட்டார். எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதவான் “தற்காப்பு என்பது வேறு; ஒருவரின் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது அப்பாவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் என்பதால், குறித்த இளைஞருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் கழித்திருந்த காரணத்தால், மீதமுள்ள தண்டனைக் காலத்தை கண்காணிப்பு நிபந்தனைகளுடன் பிணையில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த குறித்த இளைஞனுக்கு கடந்த ஆண்டு அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. மெல்போர்னிலிருந்து வேலை தேடி பிரிஸ்பேனுக்கு சென்ற அவர், சம்பவம் நடந்த காலத்தில் வேலையற்றவராகவும் நிரந்தர இருப்பிடம் இல்லாதவராகவும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அவரது நண்பருக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ss

கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக உறுதிப்படுத்தியது S&P Global Ratings!

July 29, 2026

இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக எஸ்டி

cus

காகிதமற்ற சுங்க அறிக்கை ஒக்டோபர் முதல் நடைமுறை

July 29, 2026

காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல்

ha

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள்இ ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்திலேயே தங்கியுள்ளது – பிரதமர்

July 29, 2026

பௌதிக வளர்ச்சி எவ்வளவு தூரம் இடம்பெற்றாலும், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக

jap

ப்பான் நிலநடுக்கம் குறித்து…

July 29, 2026

ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக

inte

சர்வதேச சகோதரிகள் தினம்

July 29, 2026

திய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி, எதிர்வரும் சர்வதேச சகோதரிகள் தினத்தை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியன்று

j

கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன்

July 29, 2026

பனந்துறை கடற்கரைப் பகுதியில் நீல போத்தல் ஜெல்லி மீன் (Physalia) எனப்படும் கடல் உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறித்து, தேசிய

jud

தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை

July 29, 2026

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம

mand

மண்டைதீவு படுகொலை புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

July 29, 2026

மண்டைதீவு படுகொலையின் வழக்கு நேற்று(28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும்

au

அவுஸ்திரேலியாவில் ஒருவரைத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

July 29, 2026

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச்

kand

மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் – கந்தசாமி பிரபு

July 29, 2026

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாசாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கு எதிராகச்

su

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 29, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து

Parl

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

July 29, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான பல ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக்