அரச நிதி பற்றிய குழுவில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதி பற்றிய குழுவில், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தச்) சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2026 ஜூலை 01 முதல் வரியில் பதிவு செய்வதற்கான வருடாந்த வருவாய் வரம்பு 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2026 மே 01 முதல் வாகன இறக்குமதி அல்லது உற்பத்தியின் பின்னரான விற்பனையின் போது சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி வசூலிக்கப்படவுள்ளது. எனினும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் இந்த வரியிலிருந்து விடுவிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ஆகியவற்றைத் திருத்தி, ஒரு ஒற்றை வரி முறையாகப் பேண வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதுள்ள வரி வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு எதிர்காலத்தில் வரி கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலதிகமாக, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு டொலர் பிணைமுடிகளில் முதலீடு செய்வதற்கான புதிய விதிகளுக்கும் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, முன்னைய விதிகளின் கீழ் இலங்கை அபிவிருத்தி பிணைமுடிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த முதலீட்டு வாய்ப்பு நீக்கப்பட்டு, புதிய திருத்தங்கள் மூலம் ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தில் 10% வரை அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு செலாவணி ரீதியான கடன் பிணைமுடிகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,