அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்திரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது எனவும், நிலக்கரி கொள்வனவின்போது இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை ஏற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்துறை குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுள்ள போதிலும், நெல்லுக்கான நியாயமான விலையைத் தீர்மானிக்க அரசாங்கம் தவறியுள்ளதோடு, உர விநியோகத்திலும் பெரும் தாமதங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுவதாக அவர் சாடினார்.

மேலும், நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், தகுதியற்ற நபர்கள் பொறுப்புகளில் இருப்பதாலேயே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இது குறித்து ஜனாதிபதி உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசியல் கூட்டணிகள் அல்லது மே தினக் கொண்டாட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கு முன்னதாக, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

i

கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விசேட

Airbus_A330-200_-_SriLankan_Airlines_4R-ALG

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்?

March 10, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான்

oor

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

March 10, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை

ha

பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு சர்வதேச தலைமைத்துவ விருது

March 10, 2026

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட

Ir

இலங்கையில் உள்ள தமது நாட்டவரின் சடலங்களைப் மீளப்பெற ஈரான் நடவடிக்கை

March 10, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில்

ceb

கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வேலைநிறுத்தம் தொடரும் – மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள்

March 10, 2026

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Accident

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

March 10, 2026

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர்

MAr

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

March 10, 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம்

Nam

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

March 10, 2026

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது