அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளது?

அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது.

கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க டொலர் விலையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார். அந்நாட்டிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை 220 முதல் 320 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், 800 டொலர் போன்ற அதிக விலைக்கு உரத்தை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள தேசிய உரச் செயலகம், அந்நாட்டிலிருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தாம் தாமதமின்றி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரையில் அந்த நிறுவனங்கள் கஜகஸ்தானில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என அந்த செயலகம் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல், ஏப்ரல் 29ஆம் திகதி ‘Ceylon Trading and Plantation (Pvt) Ltd’ எனும் நிறுவனம் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்திற்கான கட்டளையைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், அந்த நிறுவனமும் இதுவரை யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என தேசிய உரம் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதத்தில் இந்தியாவும் ஒரு மெட்ரிக் தொன் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 900 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளதாகவும் அந்த செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி