லங்கையில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த வரி வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச வருவாய் இலக்குகளை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முறையான வரி நிர்வாக செயல்முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களும் இந்த சாதனை அளவிலான வருவாயை ஈட்டுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இத்தகைய அதிகளவிலான வரி வருவாய் பதிவாகியிருப்பது, நாட்டின் அரச நிதி வரலாற்றில் ஒரு விசேட மைல்கல் என நிதித்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.