அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ளத் தவறியமையே கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணம் – அஜித் பி பெரேரா

அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக வாக்களித்துள்ளபோதும் தற்போது பாராளுமன்ற  குழு அமைத்து, அதனை திட்டமிட்டு பிற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்றக் குழுவில் நாங்கள் தொடர்ந்து இருப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ளத் தவறியமையே கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனுரகுமார திஸநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை அடிப்படையாகக்கொண்டே மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அந்த கொள்கை பிரகடனத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்போவதாக தெரிவித்த விடயங்களில் முக்கியமாக, புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகும் நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று  அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளத் தவறியமையே ஜூலை கலவரத்துக்கு காரணமாக அமைந்தது.  அதனால் நாங்கள் அனைவரும்  பாதிக்கப்பட்டோம். அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதான அம்சம்தான் அரசியலமைப்பு திருத்தம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் இன்னும் செய்யத் தவறியிருக்கிறது.

அதேபோன்று  திகதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  மாகாணசபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடத்தினார்களா?  ஆனால் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தெரிவிக்கும்போது, பாராளுமன்ற குழு அமைத்து, மாகாண சபை தேர்தலை தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது. தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் திட்டமிட்டு இதனை இழுத்தடிப்பு செய்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்ற குழுவில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறதா என்ற திீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்வதாக கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இதுதொடர்பில் எந்தவொரு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. இனங்களுக்கிடையில் மோதல்களை தவிர்ப்பதற்கு அனைத்து மத குழுவொன்றை அமைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அத்துடன் நாட்டில் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்றும் அவர்களை விடுவிக்க எந்த நடைமுறையும் இல்லை என்றும் நீதி அமைச்சர் இந்த சபையில் தெரிவித்தார். ஆனால் அரசியல் கைதிகளை விடுவித்து, அவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று  அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என தெரிவித்து வருகிறார்கள். அதனால் தேசத்தை கட்டியெழுப்புவதாக அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள எந்த விடயத்தையும் இதுவரை செய்யவில்லை என்றார்.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்