வழக்கிலிருந்து தப்பிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்குகள் நாட்டை பிளவு படுத்துவதாகவும், விசாரணையை உடனடியாக முடிப்பது தேசிய நல்லிணக்கத்தை மீட்டெடுக்க உதவும் என்றும், வீடியோ ஒன்றில் நெதன்யாகு கூறியிருந்தார்.

மேலும், வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்ட மற்றும் நீதித்துறை கருத்துக்களை பெற்ற பின், பொறுப்புடனும், நேர்மையுடனும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் அதிபர் ஐசக்குக்கு எழுதிய கடிதத்தில், நெதன்யாகுவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார் நெதன்யாகு.

பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவது அரிதான மற்றும் விதிவிலக்கான நடவடிக்கையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், வருத்தம் தெரிவிக்காமலும் மன்னிப்பு கோருவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி தலைவர்கள் வாதிடுகின்றனர்.

WhatsApp Image 2026-08-09 at 21.45.02

டொராண்டோ மேயர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு!

August 9, 2026

டொராண்டோ மேயர் வேட்பாளரும் தொழில்முறை பொறியாளருமான டாக்டர் பஹிரா அப்துல்சலாம் (Dr. Bahira Abdulsalam), இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உள்நாட்டு

chau

ரொறன்ரோ மேயர் தேர்தல் புதிய கருத்துக்கணிப்பு: முன்னிலையில் ஒலிவியா சௌ!

August 9, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் உள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று ரொறன்ரோ மேயர் பந்தயத்தின் தற்போதைய நிலவரத்தை

WhatsApp Image 2026-08-09 at 19.59.18

செம்மணியில் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாமல் சிறுவனின் எலும்புகூடு!

August 9, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருடைய

_103113703_0c9c0649-85a5-44b4-a84a-57154aed8515.jpg

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது! 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி! – முழு நிலவரம்!

August 9, 2026

கூடலூர் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால்

83e03253-6dbc-4f6f-ae69-03efb126b8ac

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை! சிமெண்ட், இரும்பு மற்றும் தொழிலாளர் கூலிப் பட்டியல் திருத்தம்! பொதுப்பணித்துறை அதிரடி!

August 9, 2026

சென்னை அரசு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், திட்டச் செலவுகளைக் குறைக்கவும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப்

ministerramesh-2026-08-09-11-28-35

பழனி, மதுரை கோயில் நில மோசடிகளில் அதிரடி நடவடிக்கை! – அமைச்சர் ரமேஷ் பேட்டி!

August 9, 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நில மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கோயில்களில்

397df180-4db1-11ef-b2d2-cdb23d5d7c5b.jpg

கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட 800 பேர் கூண்டோடு கைது! தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

August 9, 2026

சென்னை ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800

kanimozhi-nvn-somu-2026-08-09-12-35-12

“பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை!” – திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு அதிரடிப் பேட்டி!

August 9, 2026

சென்னை சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்

cm-vijay-keerthana

விருதுநகர் மேற்கு மாவட்டத்தைக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்! தவெக புதிய பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சிப் பதிவு!

August 9, 2026

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாக வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒன்றான ‘விருதுநகர் மேற்கு’ மாவட்டக்

69615

விவசாயிகளிடம் ரூ.1500 கோடி வசூலித்துவிட்டு மோசடியா? மின் இணைப்பு வழங்காத தவெக அரசை கண்டித்த அன்புமணி ராமதாஸ்!

August 9, 2026

சென்னை தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாக இணைப்பு வழங்காமல்

1200-675-27345049-thumbnail-16x9-markandeyan

“பணம் கொடுப்பதும், பதவி கொடுப்பதும் ஒன்றுதான்!” – தவெகவில் விஜயபாஸ்கருக்குப் பதவி வழங்கியதை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

August 9, 2026

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

1200-675-24228773-thumbnail-16x9-sp-velumani

“உங்களின் தவறான முடிவால் பணத்தை இழந்த அதிமுகவினர்!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கக் கடிதம்!

August 9, 2026

சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும்