வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது.

ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன.

இதனால் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் நிர் மூலமாக்கப்பட்டு உள்ளன.

இந்தபோரில் தங்கள் அதி உயர் தலைவரை முதல் நாளிலும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல தலைவர்களையும் பறிகொடுத்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில் ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

குறிப்பாக ஈரானின் கடற்படைகள், விமானப்படைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இப்படி வெற்றிக்களிப்பில் அமெரிக்கா இருந்து கொண்டிருக்கும்போது தான் ஈரான் தனது அடுத்த ஆயுதத்தை இறக்கி விட்டது.

அதாவது 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் ஏவுகணையை யாரும் எதிர்பாராத வகையில் களத்தில் இறக்கி அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இதன்படி இந்தியப்பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவான டியாகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கா- இங்கிலாந்து நாடுகளுக்கு சொந்தமான படைத்தளத்தை நோக்கி 2 ஏவுகணைகளை நேற்று வீசியது.

ஈரான் வீசிய இந்த நீண்ட தூர ஏவுகணை ‘கொரம்சாகர்-4’ வகையை சார்ந்தது ஆகும். நேற்று வீசப்பட்ட 2 ஏவுகணைகளிலும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், இந்த தாக்குதல் முயற்சியே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பிற நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அவை கூறியுள்ளன.

இதன்படி ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, டென்மார்க், லாட்வியா, சுலோவீனியா, எஸ்டோனியா, நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக் குடியரசு, ருமேனியா, பஹ்ரைன், லிதுவேனியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து, தாக்குதல்களை நிறுத்தக் கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், வளைகுடாவில் ஆயுதமற்ற வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும், ஈரானியப் படைகளால் ஹோர்முஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்டிருப்பதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,

தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக நீரிணையை தடுக்கும் தனது அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகள், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறும், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2817-க்கு இணங்குமாறும் ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்