லலித்குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் – கோத்தாபயவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் நேரில் முன்னிலையாகி, அங்கிருந்து நிகழ்நிலையில் (Online) சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடிக் கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு அரங்கேறிய இக்கொடூரக் கடத்தல் சம்பவம் தொடர்பான ஆள்கொணர்வு மனு (Habeas Corpus), நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் திரட்டிப் பாரிய போராட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனை முன்னின்று ஒழுங்கமைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அதற்கு முதல் நாள் (டிசம்பர் 9) யாழ். ஆவரங்கால் பகுதியில் வைத்து மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி உறவினர்களால் 2012-ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கடத்தல் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது. அதன்படி 2012 செப்டம்பர் 19 முதல் யாழில் விசாரணைகள் ஆரம்பமாகின. கடந்த 2017-ஆம் ஆண்டு இவ்வழக்கின் முக்கிய சாட்சியாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டு, அவரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு நேரில் சமூகமளிப்பதில் தனக்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார். பாதுகாப்புத் தடைகள் குறித்த சத்தியக் கடதாசியை (Affidavit) அவர் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது அவர் நிகழ்நிலை (Online) ஊடாகச் சாட்சியமளிக்க யாழ். மன்று அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், வீட்டில் இருந்தபடி நிகழ்நிலையில் சாட்சியமளிக்க முடியாது எனத் தெளிவுபடுத்திய யாழ். நீதவான், கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள ஏதேனும் ஒரு பிரதான நீதிமன்றத்திற்கு நேரில் சென்று அங்கிருக்கும் நீதவான் முன்னிலையிலேயே நிகழ்நிலை ஊடாக யாழ். மன்றுடன் இணைய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார்.
தான் கொழும்பில் எந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார் என்பதையும், அதற்கு ஏதுவான மூன்று சாத்தியமான திகதிகளையும் யாழ். நீதிமன்றத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கோட்டாபய தரப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மன்று இறுதி செய்யும் ஒரு திகதியில் அவர் சாட்சியமளிக்க வேண்டும்.
யுத்தக் காலப்பகுதியிலும் அதன் பின்னரும் வடக்கில் இடம்பெற்ற கடத்தல்களுக்குப் பாதுகாப்புத் தரப்பே பொறுப்புக் கூற வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், லலித் – குகன் விவகாரம் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு வழக்காகும்.
தற்போதைய சூழலில், கோட்டாபய ராஜபக்சவைச் சாதாரண சிவிலியனாகக் கருதி கொழும்பு நீதிமன்றத்திற்கு வரவழைத்து, அங்கிருந்து யாழ். நீதிமன்றத்துடன் ஆன்லைனில் இணைக்க முற்படும் இந்த உத்தரவு சட்ட ரீதியாகப் பாரிய முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், 14 வருடங்களாக மூடிமறைக்கப்பட்ட கடத்தல் சம்பவத்தின் உண்மைகள் மற்றும் உத்தரவிட்ட உயர்மட்டப் புள்ளிகள் யார் என்ற விபரங்கள் வெளிவரக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் நம்புகின்றன.
gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்