ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணம்

ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணத்தை விளக்கிய மத்திய வங்கி ஆளுநர்
மத்திய கிழக்கின் நிலவும் நெருக்கடி நிலை மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்தமையே இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கு முதன்மைக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவை அதிகரித்துள்ளமையினால் ரூபாவின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும், எரிபொருள் இறக்குமதியில் பெருமளவில் தங்கியுள்ள பல நாடுகளைப் பொதுவாகப் பாதித்துள்ள உலகளாவிய பொருளாதார அதிர்ச்சியின் விளைவு இது என்றும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.

அத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா பாரியளவில் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டில் நிலவிய குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும், தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபட்டு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக முடிவெடுப்பது சரியானதல்ல என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

“நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய ரூபா 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இந்த நாணய வீழ்ச்சியானது நம்மைப் போன்ற ஏனைய நாடுகளுக்கும் பொதுவான ஒரு விடயம் என்பது தெளிவாகப் புரிகிறது. அதற்கு இணையாகவே இது நடந்துள்ளது, பெரியளவில் வேறுபட்டதாக இல்லை. இதற்குக் காரணம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெயை முழுமையாக இறக்குமதி செய்து, அதற்காக அதிக செலவு செய்யும் நாடுகளாகும்.

2022 ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலையில், இலங்கைக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களினால் நமது ரூபா பாரியளவில் வீழ்ச்சியடைந்தது; அது உலகளாவிய காரணிகளால் அல்ல. ஆனால், தற்போதைய நிலவரப்படி இலங்கை ஏனைய ஒப்பிடக்கூடிய நாடுகளுடன் ஓரளவு ஒரே மட்டத்திலேயே உள்ளது. எனவே, இது வெளிப்புற அதிர்வுகளால் ஏற்படும் ஒரு விடயமாகும்.

நாணய மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைவதென்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் குறிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நமது பிரதான ஊடகவியலாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. தற்போது இந்திய ரூபா வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலுள்ளது, இந்தோனேசிய ரூபாவும் இன்றைய தினம் வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அதற்காக அந்த நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்றோ, ஸ்திரமற்றது என்றோ கூற முடியாது. அது ஒரு தவறான கருத்தாகும். நாணய மாற்று விகிதத்தை மாத்திரம் பார்த்து ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது கடினம். இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன.” என்றார்.

3

“திமுக ஒரு நச்சுப்பாம்பு; தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்!” – கூட்டணிக் கட்சியான மதிமுக-வின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் அசுர வேக அதிரடி!

June 13, 2026

சென்னை: “பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத் தான் கக்கும், அதேபோலத் திமுக ஒரு கொடிய நச்சுப்பாம்பு; திமுகவினர் தில்லுமுல்லுக்கு முழுச்

2

“சினிமா பாணியில் சிறப்புப் படை; தனிமனித ஒழுக்கத்தை முதலில் உங்கள் கட்சியினருக்குச் சொல்லுங்கள்!” – ஆலந்தூர் தவெக பாலியல் விவகாரத்தில் முதல்வர் விஜயை அசுர வேகத்தில் வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

June 13, 2026

சென்னை: “சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப் படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்துப் பொதுமக்களுக்கு மேடையில் அறிவுரை

1

“சென்னையின் மின்திறன் 3,500 மெகாவாட், ஆனால் பயன்பாடு 5,000 மெகாவாட்! திமுக ஆட்சியில் மின்கட்டமைப்பு சீரழிக்கப்பட்டது!” – வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அசுர வேக குற்றச்சாட்டு!

June 13, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டமைப்பு வசதிகளைக் கடந்த கால திமுக ஆட்சி எவ்விதத்திலும் உருவாக்கவில்லை; அதிமுக

en

உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

June 13, 2026

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

iran

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

June 13, 2026

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி

ha

நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

June 13, 2026

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின்

kaveendran

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில்

mujipur

மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

June 13, 2026

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை

Walk-1-1-1-2-3

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 13, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

thum

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு

5Y6OSMTX3FCXBO26E4SV6JCRGM

உலகக் கோப்பை கால்பந்து: கானா அணி நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி கனடாவுக்குள் நுழைய தடை!

June 13, 2026

டொராண்டோ: கானா நாட்டின் முன்னணி கால்பந்து மத்தியக்கள ஆட்டக்காரரான (Midfielder) தாமஸ் பார்ட்டி (Thomas Partey) கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு

DQM2IQB3OZC4FOEXASINC2UA5U

டொராண்டோ மைதானத்தில் பரபரப்பு: காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய போஸ்னியா நாட்டு ரசிகர்கள் இருவர் கைது

June 13, 2026

டொராண்டோ: டொராண்டோ மைதானத்தில் (Toronto Stadium) இன்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக