ரி20 உலகக் கிண்ணம்; இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன!

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் கூட்டாக நடத்தப்பட்ட 9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்திலும் சம்பியனான இந்தியா 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

அதேவேளை, ரி20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்றெடுக்கும் குறிக்கோளுடன் மிச்செல் சென்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து களம் இறங்கவுள்ளது.

துபாயில் 2021இல் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து, இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை எதிர்த்தாடிய 3 சந்தர்ப்பங்களிலும் நியூஸிலாந்து வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தியாவை தென் ஆபிரிக்காவில் 2007இல் 10 ஓட்டங்களாலும் இந்தியாவில் 2016இல் 47 ஓட்டங்களாலும் துபாயில் 2021இல் 8 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ணத்தில் நான்காவது தடவையாக சந்திக்கும் போது நியூஸிலாந்து வெற்றி அலையைத் தொடரவும் இந்தியா தனது தோல்விகளுக்கு பதலடி கொடுக்கவும் முயற்சிக்கும் என்பது திண்ணம்.

இந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடிய தென் அபிரிக்காவை, ஃபின் அலன் குவித்த ரி20 உலகக் கிண்ண சாதனைமிகு அதிவேக சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் நொக் அவுட் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பை ஏற்படுத்திய மற்றைய அரை இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்துக்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இந்தியா 4 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

மேலும் இந்தியாவும் நியூஸிலாந்தும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 30 சந்தர்ப்பங்களில் 16 – 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

இம்முறை இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக தென்படுவதால் இறுதிப் போட்டி இறுக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் தனது சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடுவதால் அந்த அணி சம்பியனாவதற்கு அனுகூலமான அணி என கருதப்படுகிறது.

‘வெற்றிபெறுவதற்கு நாங்கள் அனுகூலமான அணி அல்ல என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றிக் கிண்ணத்தை ஒரு தடவை சுமப்பதற்கு சிலரின் இதயங்கள் நொறுங்குவது பரவாயில்லை என நான் கருதுகிறேன்’ என இறுதிப் போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் கூறினார்.

இதேவேளை, ‘அவர்கள் நல்ல திட்டத்தோடு வருகை தந்துள்ளார்கள். நாங்களும் நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளோம். இந்தப் பெரிய இறுதி ஆட்ட மேடைக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். மற்றையவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நாங்கள் திறமையாக என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்’ என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்து: டிம் சீஃபேர்ட், ஃபின் அலன், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் சப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றிஃ, இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன்.

fsfsdf

கார்னி தலைமையிலான கட்சி இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெற 53% கனடியர்கள் விருப்பு

April 12, 2026

திங்கட்கிழமை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி லிபரல் கட்சி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான இடங்களை

sdfsfs

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி?

April 12, 2026

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொரட்டுவை பிரதேச

d

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க லிபரல் கட்சி தீர்மானம்

April 12, 2026

கனடியர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தகுதியுள்ள வயதை 16 ஆக நிர்ணயிப்பதற்கு ஆதரவாக ஃபெடரல் லிபரல் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

womenArrest_1200px_22_11_21-1000x600-1

வௌிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

April 12, 2026

தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க

heat wa

நாளை அதிக வெப்பம்!

April 12, 2026

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண்

soc

சமூக ஊடகப் பாவனையில் கவனம்!

April 12, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

lo

பாலத்திலிருந்து லொறி வீழ்ந்து விபத்து: இருவர் பலி

April 12, 2026

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய

death

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 12, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58

rajee

வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்க தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பிரேரணை

April 12, 2026

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில்

kad

யாழ்.நாகர்கோவில் கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது!

April 12, 2026

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6

arr

விசேட அதிரடிப்படை வீரர் உட்பட ஆறு பேர் கைது

April 12, 2026

மட்டக்களப்பு – கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் யூ மற்றும்

lak

சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர

April 12, 2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள்