போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டார். 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வரும், குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என ஏதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய சேவைத் தேவையை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள் இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையகம் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்துக்கு பல முறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்குத் தேவையான இலத்திரனியல் புகைப்படம் அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குறைந்த வருமானக் குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்கள் இந்த நிலைமையால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அந்த ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள ஆரம்பிக்க தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை வழங்குமாறும், மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகமாவது இயங்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக திணைக்களம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனது அலுவலகத்திற்கு விரைவாக அறிவிக்குமாறும் ரவிகரன் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கடிதம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றி அலுவல்கள் அமைச்சர், குறித்த அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கும் பிரதிகளாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Uthaya

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

August 1, 2026

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

acci main

புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

August 1, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார்

tr

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

August 1, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான

bl

’பாரமிதா’ இரத்ததான முகாம்

August 1, 2026

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று

sp

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

August 1, 2026

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான

jos

யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி மீது வழக்கு

August 1, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக

boa

மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும்

pre

பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக!

August 1, 2026

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான

dd

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

August 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள். அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படுகிறது.

photo-collage.png (7)

செம்மணி விவகாரத்தில் உயரதிகாரிகள் எவரும் ஏன் தண்டிக்கப்படவில்லை ஜெனிவாவில் சட்டத்தரணி இரத்னவேல் கேள்வி!

August 1, 2026

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண

boat1

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

August 1, 2026

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும்

va

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம்

August 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை