முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு உடனடியாக எதிர்ப்புத்தெரிவித்த துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55 பேருக்குரிய 59.5 ஏக்கர் காணிகளும் 4 பேருக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மைநிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் இதன்போது இராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5 ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை தாமும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ரவிகரன் நடவடிக்கை எடுத்தார்.

அதற்கமைய கடந்த 12.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலாளர் அ.உமா மகேஸ்வரனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை தம்மிடம் கையளிக்குமாறு ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்தார்.

அதற்கமைய 12.01.2026ஆம் திகதியிடப்பட்ட DSM/LAN/KEP/MPP/2025/21ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை கடந்த 14.01.2026அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக வாழ்விடத்தை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2026 அன்று கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான கோரிக்கைக் கடிதத்துடன் ரவிகரனால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பதினாறு ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்தில் குடியேறக் காத்துக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் குடியிருக்கச்செய்வதற்கு தேவையான உத்தரவுகளையும், உரிய நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு குறித்த ஜனாதிபதிக்கான கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 14.01.2026அன்று நாடாளுமன்ற உறுபினர் ரவிகரன் கேப்பாப்புலவு காணி விடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள PS/DA/SAD/06/41-Vol.01ஆம் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்குறித்த விடயம் தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் சனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 திகதிய கடிதம் தொடர்பானது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)

அந்த கடிதத்தின் மூலம், முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களால் மாதாந்தம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் காணி விடுவிப்பு பற்றிய முன்னேற்றம் தொடர்பான ஆவணத்தை ஆய்வு செய்தபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் – எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Iran

வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

March 18, 2026

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத்

Mars

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

March 18, 2026

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே

jr

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

March 18, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து

Sanjeeva ethiri

விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

March 18, 2026

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள்

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி