முன்னெடுக்கப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பு

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை தற்போதைய அரசாங்கம் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி கடந்த கால ஆட்சியாளர்களின் தோல்வியுற்ற திட்டங்களையே மீண்டும் திணிக்க முயற்சிக்கிறது. பழைய பாடத்திட்டத்தால் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் பாராளுமன்ற கல்விச் சீர்திருத்தக் குழு கூடி புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியுள்ளது. ஆனால், இந்தப் புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்போது பாரிய சிக்கல்கள் எழும் என்பது வெளிப்படையானது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவை அல்ல. இவை கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கலாநிதி உபாலி சேரசிங்க போன்றவர்களால் திட்டமிடப்பட்ட பழைய ஆவணங்களாகும். இதையே தற்போதைய அரசாங்கம் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப் பார்க்கின்றது.

கடந்த அரசாங்கத்தின் திட்டத்தின்படி, இந்தச் சீர்திருத்தங்கள் முறையாகச் செயல்பட்டிருந்தால் 2027 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் சாதாரண தரப் பரீட்சையும், 2028 இல் உயர்தரப் பரீட்சையும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அரசின் திட்டமிடல் குறைபாட்டால் இவை 2029 மற்றும் 2033 ஆம் ஆண்டுகள் வரை பின் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்த 6 ஆம் தரத்துக்கான புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண தரப் பரீட்சை 2030 ஆம் ஆண்டுக்கும், உயர்தரப் பரீட்சை 2034 ஆம் ஆண்டுக்கும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பாடத்திட்டம் ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2023 இல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. இதனால் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் காலாவதியான பாடத்திட்டங்களையே கற்று வருகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் 2015 ஆம் ஆண்டுக்குரிய தரவுகளையே கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எமது நாட்டு மாணவர்கள் இன்னும் பழைய விடயங்களையே படித்துக் கொண்டிருப்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாரிய அளவில் பாதிக்கும்.

பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழி மூலக் கல்விக்கு அதிகத் தேவை உள்ளது. இதன் காரணமாகவே பலரும் அரச பாடசாலைகளை விடுத்துத் தனியார் பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர். 2002 ஆம் ஆண்டு கலாநிதி தாரா டி மெல் கல்வி அமைச்சின் செயலாளராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழி கல்வித் திட்டம் இன்று ஆசிரியர் பற்றாக்குறையாலும் முறையான கண்காணிப்பு இல்லாமையாலும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளது.

ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்குவதற்கான முறையான பயிற்சிகள் தற்போது வரை ஆரம்பிக்கப்படவில்லை. இன்று ஒரு ஆசிரியப் கலாசாலையில் பயிற்சியை ஆரம்பித்தால் கூட, அவர்கள் வெளியேற இன்னும் மூன்று ஆண்டுகள் எடுக்கும். அப்படியென்றால் 2030 வரை ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கப்போகின்றது. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களால் எவ்விதப் பயனும் இல்லை.

அரச பாடசாலைகளில் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்து வருவதால், பெற்றோர்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளைத் தனியார் பாடசாலைகளிலும், பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டும் மேலதிக வகுப்பு வர்த்தக அமைப்புகளிடமும் தஞ்சம் புகச் செய்கின்றனர். வினாத்தாள்களை மையமாகக் கொண்ட ஒரு கல்வி முறையே இங்கு காணப்படுகின்றது. பாடசாலைக்குச் செல்லாமல் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றால் மட்டுமே பரீட்சையில் சித்தியடைய முடியும் என்ற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வெறுமனே கூட்டங்களை நடத்தி மொடியூல் முறைகளை அறிமுகப்படுத்துவதால் மட்டும் கல்வியை மேம்படுத்த முடியாது. 1947 ஆம் ஆண்டு சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் இன்று சிதைக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகக் கல்வியைப் பயன்படுத்தாமல், மாணவர்களின் உண்மையான எதிர்காலத் தேவைகளையும், நவீன உலக மாற்றங்களையும் கருத்திற் கொண்டு புதிய தேசியக் கொள்கையொன்றை வகுக்க வேண்டும் என்றார்.

ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவு-கஞ்சி நிகழ்வு மக்களினால் முன்னெடுக்கப்பட்டது .

May 14, 2026

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன

arrest

மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர்

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்