முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ மீது பாய்கிறதா உரிமை மீறல் நடவடிக்கை?

சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுங்கட்சி அமைச்சர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவையின் உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டு அதிரடி முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடந்த இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்ஜெட் விவாதமும்.. வெடித்த சர்ச்சையும்:
சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தவெக அரசின் பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்தார். “இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் இருப்பது போன்று தெரிகிறது, ஆனால் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. இதைத்தான் ‘கானல் நீர்’ என்பார்கள். மண்புழு உரம் தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளீர்கள்; இது கடந்த திமுக ஆட்சியிலும் ஒதுக்கப்பட்டதுதான். மாற்றம் என்று கூறிய இந்த அரசு எவ்வித மாற்றத்தையும் தரவில்லை” என்று விமர்சித்தார். மேலும், “இந்த அரசு என்னைச் சிறையில் அடைத்தது. தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நான் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளேன்” எனவும் பேசினார்.
குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்துச் சட்டப்பேரவையில் பேசக்கூடாது. முதலமைச்சர் குறித்து மார்க்கண்டேயன் தரக்குறைவாகப் பேசியதால்தான் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று பதிலடி கொடுத்தார்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனின் காட்டமான அறிவுரை:
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மார்க்கண்டேயன் பேரவையில் சிறப்பாகவே பேசுகிறார். ஆனால், பொதுவெளியில் அவர் பேசிய வன்முறை மற்றும் அவதூறு பேச்சுகள் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் புகார் கடிதம் கொடுத்துள்ளனர். ஆபாசமான, வன்முறையைத் தூண்டும் பேச்சுகளால் என்ன சாதிக்க முடியும்? நாம் பேசுவதை வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்; அவர்கள் ஏற்றுக் கொண்டால், உங்கள் மனசாட்சி அதற்குப் பதில் சொல்லட்டும்! இந்தியாவே தமிழ்நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற அருவருக்கத்தக்கப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்” எனக் காட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், “இதுகுறித்து உரிய விசாரணை நடத்த, அவையின் உரிமை மீறல் குழு அமைக்கப்படும். அக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலும், உறுப்பினரிடம் விளக்கம் கேட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனச் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
எ.வ.வேலுவின் எதிர்ப்பு மற்றும் சபாநாயகரின் இறுதிப் பதிலடி:
சபாநாயகரின் இந்த முடிவுக்கு திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். “பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதற்காகக் காவல்துறை ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் அதை விசாரித்துத் தண்டனை வழங்கும். சட்டப்பேரவையில் தவறாகப் பேசியிருந்தால் மட்டுமே உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப முடியும். ஒரே பிரச்சனைக்குக் காவல்துறை, சட்டப்பேரவை என இரண்டு இடங்களில் தண்டனை வழங்குவது என்பது இல்லாத ஒன்று; இதனைப் பேரவைத் தலைவர் பரிசீலிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுவெளியில் சட்டப்பேரவையையும், முதலமைச்சரையும் பற்றித்தான் அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து விசாரிக்க எனக்கு முழு உரிமை உள்ளது!” என ஆணித்தரமாகத் தெரிவித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
#Markandeyan #DMK #ThalapathyVijay #ChiefMinisterVijay #TVKGovernment #TNAssembly #JCDPrabhakar #EVVelu #AadavArjuna #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNPolitics #PoliticalUpdatesTN
gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்