மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில், மார்ச் 04ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 05ஆம் திகதி காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெற்றன.

இந்த வேலைத்திட்டங்களில் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

நாட்டிற்குள் போதைப்பொருள் வரும் பிரதான வழியாகக் கடல் மார்க்கம் இனங்காணப்பட்டுள்ளதால், இந்த வேலைத்திட்டத் தொடரின் முதன்மை அவதானம் பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் மற்றும் படகு ஓட்டுநர்களை விழிப்புணர்வூட்டுவதிலேயே செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்படையினர் தமது கடல் நடவடிக்கைகள் மற்றும் படகுகளைப் பரிசோதிக்கும் முறைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலுக்குப் படகுகள் பயன்படுத்தப்பட்ட முன்னைய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்குப் படகு உரிமையாளர்களை வலுவூட்டினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தலுக்குக் கடல் மார்க்கத்தைப் பயன்படுத்துவது எமது நாட்டிற்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். இதில் ஈடுபடும் ஒரு சிறு குழுவினரால் ஒட்டுமொத்தக் கடற்றொழில் துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது.

படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை விழிப்புணர்வூட்டி, தமது பணியாளர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்கு அவர்களைப் பலப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இதன் மூலம் போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும், அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காது அவர்களைப் பாதுகாக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

‘போதையற்ற நாடு’ ஒன்றை உருவாக்கும் தேசிய கொள்கைக்குக் கடற்றொழில் அமைச்சு வழங்கும் முழுமையான பங்களிப்பு இதுவாகும். “இவ்வேலைத்திட்டங்களில் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்களின் உற்சாகமான பங்கேற்பு மற்றும் அவர்களின் கருத்துக்கள் இங்கு விசேட பாராட்டுக்குள்ளானதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இப்போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் இங்கு ஏகமனதாக உறுதியளித்தனர்.

தென் கரையோரத்தின் பிரதான நான்கு மீன்பிடி மாவட்டங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், கடற்றொழில் துறையைச் சட்டவிரோதக் கடத்தல்களிலிருந்து மீட்டெடுப்பதற்கு, ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினதும் ஒத்துழைப்புடன், அமைச்சு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

oi

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது

March 7, 2026

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது

Poli

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

March 7, 2026

இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை

ceb

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எரிசக்தி அமைச்சு

March 7, 2026

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு

44

மாவடிப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 7, 2026

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று

in

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

March 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.

coo

சமூக வலைத்தள விற்பனை முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞர்

March 7, 2026

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

urum

உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

March 7, 2026

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள்

mug

டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

March 7, 2026

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட

aswe

அஸ்வெசும திட்டம் – வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

March 7, 2026

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப்

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்