மீனவப் படகுகள் மீதான தாக்குதல்: அரசாங்கம் தொடர் விசாரணை

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் இன்று (07) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதில் இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோரக் காவல்படையோ இச்சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எவ்வாறாயினும் இது குறித்து உண்மைகளைக் கண்டறிய அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து மேலதிகமாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே:

“கடந்த நாட்களில் இலங்கை கடற்பரப்பில் எமது இரண்டு மீனவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவின் கடலோரக் காவல்படையினரே இத்தாக்குதலை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இது குறித்து ஆராய வேண்டும். எனவே கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இது பற்றி விசாரிக்குமாறு கூறினோம். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய உயர்ஸ்தானிகர், இது இந்திய கடலோரக் காவல்படையினராலோ அல்லது இந்திய கடற்படையினராலோ மேற்கொள்ளப்பட்டதல்ல என்று மறுத்துள்ளார்.

எனினும் ஓர் அரசாங்கமாகவும், அமைச்சாகவும் நாம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நாட்டு மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமக்கு அவசியமாகும். இது குறித்து ஆராய்ந்து சரியான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது வெளிநாட்டினராலா, நம் நாட்டவர்களாலா, வேறு கும்பலா, உத்தியோகபூர்வ குழுவா அல்லது உத்தியோகபூர்வமற்ற குழுவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதைத்தான் நாம் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்