மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ் குளூனி” போன்ற அவரது வசீகரமான ஆளுமையாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும், பிரதமர் மார்க் கார்னி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார். இம்முறை டைம் (Time) சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) மூலம் இந்தப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட கார்னி, டைம் சஞ்சிகையின் ‘தலைவர்கள்’ (Leaders) பிரிவில் உள்ள 24 நபர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நிதி உலகின் ஜார்ஜ் குளூனி”
வங்கித் துறையில் “நிதி உலகின் ஜார்ஜ் குளூனி” மற்றும் “ராக்-ஸ்டார் மத்திய வங்கி ஆளுநர்” என அழைக்கப்படும் அவரது புனைப்பெயர்களைக் குறிப்பிட்ட லகார்ட், பல தசாப்தங்களாக இருந்து வந்த சர்வதேச ஒத்துழைப்பு (Multilateralism) முறிவடையும் நிலையை கார்னி முன்கூட்டியே கண்டறிந்ததே அவர் இந்தப் பட்டியலில் இடம்பெற முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.

“2025 இல் பிரதமரான பிறகு, நாம் பல தசாப்தங்களாக அறிந்திருந்த சர்வதேசக் கூட்டமைப்புகளின் உடைவுப் புள்ளியை முதலில் அடையாளம் கண்டவர் கார்னி தான். இப்போது அவர் அனைவரது பொது நலனுக்காகவும் புதிய முறையிலான ஒத்துழைப்பை மீள உருவாக்குவார் என்று நான் நம்புகிறேன்,” என லகார்ட் டைம் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

இந்தப்பட்டியலில் கார்னியுடன் சேர்த்து போப் 14 ஆம் லியோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் எழுச்சி
ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து கார்னி ஆட்சிக்கு வந்தார். 2025 மார்ச் மாதம் நடைபெற்ற கட்சித் தலைமைத் தேர்தலில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஒரு மாதத்தில் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்த அவர், அண்மையில் ஏனைய கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் இணைந்தமை மற்றும் ஒன்டாரியோ, கியூபெக் இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் தற்போது பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளார்.

டாவோஸ் உரையும் ட்ரம்ப்பின் எதிர்ப்பும்
இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் அவர் ஆற்றிய உரை உலக நாடுகளிடையே, குறிப்பாக நடுத்தர வல்லமை கொண்ட நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “பழைய ஒழுங்குமுறை இனி திரும்பாது என்பதை நாம் அறிவோம். அதற்காக நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏக்கம் என்பது ஒரு தந்திரோபாயம் அல்ல. ஆனால் இந்த உடைவுகளிலிருந்து நாம் சிறந்த, வலிமையான மற்றும் நீதியான ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்,” என அவர் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த உரையை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக விமர்சித்தது. “அமெரிக்காவினால் தான் கனடா உயிர்வாழ்கிறது. மார்க், அடுத்த முறை நீங்கள் கருத்துச் சொல்லும்போது அதை நினைவில் கொள்ளுங்கள்,” என அதிபர் ட்ரம்ப் நேரடியாகவே சாடியிருந்தார்.

வரலாற்றுப் பின்னணி
பிரதமர் பதவியை ஏற்கும் முன், மார்க் கார்னி கனடா மத்திய வங்கி (Bank of Canada) மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி (Bank of England) ஆகியவற்றின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.

கனடியப் பிரதமர் ஒருவர் இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பது 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு (ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்) இதுவே முதன்முறையாகும். 2016 இல் ட்ரூடோ மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்