மின்னல் அபாயம் 48 வீதம் அதிகரிப்பு

மொரட்டுவை, கட்டுபெத்தையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் “மின்னல் பாதுகாப்பு மற்றும் மின்னல் அபாயங்களிலிருந்து உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறையும் அதில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவும் நேற்று (16) வியாழக்கிழமை மாலை (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்றான மின்னல் தாக்கமானது, மனித உயிர்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற பின்னணியில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கத்தினால் சுமார் 50 பேர் உயிரிழப்பதுடன், இதனால் ஏற்படும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களின் மதிப்பு ஆண்டுதோறும் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உணர்திறன் மிக்க மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், இந்த மின்னல் அபாயத்தின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்தத் தேசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, நவீன தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இலங்கையின் முன்னணி நிறுவனமான ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம், நாட்டில் தேசிய மின்னல் பாதுகாப்பு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதற்படியாக, மின்னல் பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, இலங்கையில் தற்போது மின்னல் பாதுகாப்பு அமைப்புகளை சட்டப்பூர்வமாக முறைப்படுத்துவதற்கும், நிறுவப்பட்ட அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்கும் அல்லது அவற்றுக்கான உரிமங்களை வழங்குவதற்கும் முறையானதொரு கட்டமைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், புவி வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வெப்பநிலை 1 செல்சியஸ் அதிகரிக்கும் போது, மின்னல் தாக்கும் வீதம் 12 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் சில பகுதிகளில் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மின்னல் ஆபத்து 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்தார்.

மொபைல் போன்கள் முதல் அனைத்து மின்னணு சாதனங்களும் இன்று மிகவும் உணர்திறன் மிக்கவையாக மாறியுள்ளதால், மின்னல் தாக்கத்தின் போது ஏற்படும் மின் கசிவுகள் மற்றும் தூண்டல்களால் (Induction) பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் மட்டுமன்றி யானைகள் உள்ளிட்ட விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன. இந்த தேசியப் பேரழிவிலிருந்து சொத்துக்களையும் உயிர்களையும் பாதுகாக்க தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு ஆரம்பக் கட்டமே இப்பயிற்சிப் பட்டறை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை