மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி முதல் ‘போதைப்பொருள் தடுப்பு வாரம்’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை (04) கொழும்பு – இராஜகிரியவில் இடம்பெற்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகம் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விசேட நிகழ்ச்சி, இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சரியான புரிதல் மற்றும் மனப்பாங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர், கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைவது மட்டுமல்ல எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“போதைப்பொருள் போன்ற அழிவுகரமான விடயங்கள் குறித்து மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடம் சிக்காமல் இருக்க, ‘ஆம்’ என்று சொல்வதைப் போலவே ‘இல்லை’ அல்லது ‘முடியாது’ என்று சொல்லத் தேவையான ஆத்ம பலத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

கல்விச் செயற்பாடுகளுடன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எவ்வாறு ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் கல்வி மற்றும் தகவல் அதிகாரி மஹேஷி மதுசங்கா மற்றும் உதவி ஆலோசனை அதிகாரி உதேஷிகா லக்மாலி ஆகியோர் பிரதான வளப்பங்களிப்பை வழங்கி விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இந்தநிகழ்வில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் கசுன் ஏபா செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அரசாங்க ஊழியர்களுக்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சும், கோட்டே பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாமும் கோட்டே பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

sama

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு

May 1, 2026

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10

4EME22FUCUFXLKWCLCX26AJ45E

‘இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்’: மழலையர் பள்ளி பாலியல் வன்கொடுமை விசாரணையில் மிசிசாகா நபர் மீது வழக்கு

May 1, 2026

நயாகரா பிராந்தியத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Daycare) நடந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு

N4GRQRXYBFAE3OJP7ZBTM4PGXA

GTA யூத வழிபாட்டுத் தலங்களில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

May 1, 2026

GTA (Greater Toronto Area) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்

anura 2026

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு அவசியமாகலாம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 1, 2026

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில்

1777567784-death-6

இணைய மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி-மரணத்திற்கான காரணம் வெளியானது

May 1, 2026

ஒரு இணைய வழி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதி

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

“கத்தி பட ரிலீஸின் போது விஜய் மேலாளர் பேரம் பேசினார்” – வேல்முருகன் கிளப்பிய அதிரடிப் புகார்!

May 1, 2026

சென்னை: எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

PYHMKVVG7YLHLX7FSBZNJG3LPI

கனடாவில் அகதிகள் மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியை ஏற்க வேண்டும்!

May 1, 2026

டொராண்டோ — மத்திய அரசின் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அகதிகள் இனி தங்களின் மருந்துச் சீட்டுகள், மனநல

1200-675-25564142-thumbnail-16x9-tvk-aadhav-arjuna

“தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்” – ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!

May 1, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால்

bef4d650-71a3-11f0-a82a-7bee61c7c107.jpg

“நாட்டின் கட்டமைப்புக்குத் தொழிலாளர்களே அஸ்திவாரம்” – ஓ.பன்னீர்செல்வம் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

l35720250915134907

“வாக்கு எண்ணிக்கையில் திமுக தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு; பாமக முகவர்கள் விழிப்புடன் இருங்கள்” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

May 1, 2026

சென்னை: மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின்

y1-1744036252

“தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதா?” – சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 1, 2026

சென்னை: மே மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையேயும் வணிகர்களிடையேயும் அதிர்ச்சியை

dailythanthi_2026-05-01_5pdthyju_Untitled-3

“அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!

May 1, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார் இன்று தனது 55-வது