யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவருடைய 14 வயது தம்பியை இருவர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிறுவனை ஒரு ரகசிய இடத்தில் வைத்து, ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்துள்ளனர்.
சிறுவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவை சிறுவனின் அண்ணன் மற்றும் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை: சிறுவனின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார், சம்பவத்தை வீடியோ எடுத்தவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் நேரடியாகத் தாக்குதல் நடத்திய மற்றைய நபர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.