மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும் என யுத்தம் தொடர்பான நிபுணர்களின் கணிப்பீடுகளில் தெரியந்துள்ளது.
தென் சீனக் கடலில் நேற்று முன்தினம் (13.03.2026) சீனா தனது பலம் வாய்ந்த போர் கப்பல்கள் பலவற்றை நிறுத்தியுள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீனா தாய்வானை ஆக்கிரமிக்கப் போகிறது என. ஆனால் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது தவறானதாகும்.
ஏனென்றால் அகன்ற சீனாவின் அதாவது ஒரே சீனா என்ற கொள்கையை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியே தாய்வான் ஆகும்.
இது ஆயுதப் பலத்தால் நடைபெறுவதால் ஆக்கிரமிப்பாகவே இருக்கும்.சீனா தாய்வானை ஆக்கிரமிக்குமா என்றால் கட்டாயம் அது நடக்கும்.
சீனா இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் அல்லது கால எடுக்கலாம். ஏனென்றால் சீனாவின் ஒரு கனவு 2049 ஆம் ஆண்டு அதாவது சீன புரட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவில் உலகின் பலசாலியாக வேண்டும் என்பது.
அதாவது உலகத்தின் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதாகும்.அதற்கு சீனா பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு கட்டாயம் ஆயுதப் பலமும் அவசியமாகும். ஆயுத பலம் இல்லாமல் பொருளாதார பாய்ச்சலை மேற்கொள்ள முடியாது.
உலகளவில் காணப்படும் போட்டி சூழலில் ஆயுதப்பலம் கட்டாயம். தேவையாகும். அமெரிக்கா சீனாவை வெற்றி கொள்ள வரி விதிப்பை பயன்படுத்தியது.
அதில் வெற்றிக் கொள்ள முடியாததால் ஈரானுக்கு எதிரான் போரை ஆரம்பித்துள்ளது.சீனாவின் எரிபொருள் விநியோகத்தை தடுத்தது.
அதனால் சீனாவுக்கு தங்களின் பொருளாதார மற்றும் போர் போன்றவற்றல் ஒரு பாய்ச்சலை முன்னெடுக்க தாய்வானை கைப்பற்றுவதால் சாத்தியமாகும் என நினைக்கிறது. இது எப்படி முடியும் என பார்ப்போம்.
தாய்வான் உலகத்தில் செமிகன்டக்ட்டை semiconductor சதவீதம் உற்பத்தி செய்யும் நாடாகும்.அவர்களிடமே இந்த தொழில் நுட்பம் காணப்படுகிறது.
அதாவது கையடக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினி தயாரிப்பதற்கு தேவையான நனோ தொழில் நுட்பம் இவர்களிடம் தான் இருக்கிறது.
அத்தோடு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப சேவருக்கு இது தேவையானது. அடுத்த தொழில்நுட்ப புரட்சியான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு மிகவும் அவசியமான செமிகன்டக்ட்டை தாய்வான் தயாரிக்கிறது.
அதனால் இவற்றை கைப்பற்றிக் கொண்டால் பாரிய பொருளாதார வளர்ச்சியாகும்.தாய்வான் இல்லாவிட்டால் உலகத்தில் இந்த தொழில் நுட்பம் இல்லை.
மேலும் தாய்வான் சமுத்திர சந்தி உலகத்தில் 40 வீதம் கப்பல்கள் செல்லும் பாதையாகும்.தாய்வானை கைப்பற்றுவதால் போர் பலம் வாய்ந்த நாடுகவும் திகழலாம்.
சீனாவின் எதிர்கால நோக்கத்திற்கு தாய்வான் முக்கிய காரணியாகும்.இவ்வற்றை உற்று நோக்கினால் சீனா தாய்வான் ஆக்கிரமிப்பது சாத்தியமானதாகும்.