மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்கள மயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்களமயமாக்கும் திட்டத்தை, இங்கு தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அம்பலப்படுத்தவில்லை? வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல, கிழக்கில் இரா. சாணக்கியன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணைபோகும் திட்டத்தை வகுத்துள்ளாரா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை – ஊத்துச்சேனை மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகச் சிங்களமயமாக்குவதற்கு மட்டக்களப்பு ஒரு தடையாக உள்ளது. ஏனெனில் அது கிழக்கின் இதயமாக இருக்கிறது. அதனை நேரடியாக மாற்றுவது கடினம் என்பதால், மட்டக்களப்பின் இரு எல்லைகளான அம்பாறை மற்றும் திருகோணமலையை முதலில் முழுமையாகச் சிங்களமயமாக்கி, மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் அங்கு கைவைக்கலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம்.

“யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே கிழக்கின் எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இதனால்தான், தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து, எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற 1977 ஆம் ஆண்டு ‘வட்டுக்கோட்டை தீர்மானத்தை’ எடுத்தோம்.

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் இத்தகைய குடியேற்றங்களைப் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ஆனால், 2009 இற்கு பிறகு போராட்டத்தின் சக்தியாக இருந்த மக்களை அழித்து இனப்படுகொலை செய்த பின்னர், இன்று மட்டக்களப்பில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். இதுதான் கசப்பான உண்மை.”

“கிழக்கில் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்ற ராஜபக்ச தரப்பினர் ‘மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை’ ஆரம்பித்தனர். சோளச் செய்கை என்ற பெயரில் போலி உறுதிகளை வழங்கி, சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இதன் விளைவாகவே பண்ணையாளர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதே திட்டம்தான் தற்போது ஊத்துச்சேனை கிராமத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அநியாயத்தை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் முதன்முதலில் வெளிப்படுத்தவில்லை? யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்த பின்னரே, இது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது.”

“சிங்களமயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு கட்டம் வரை கொண்டு செல்வதற்காகவே இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனரா? அவர்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செ. கஜேந்திரனோ அல்லது கஜேந்திரகுமாரோ இது குறித்துப் பேசும்போது, ‘தேவையில்லாத பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்’ என்று பொய்களைச் சொல்லிச் சிறுமைப்படுத்தி, உண்மையை மூடி மறைக்க முடியும் என நினைக்கிறார்கள் போலும்.

மக்களிடம் வாக்குக் கேட்கும் அவர்கள், உங்கள் பிரச்சினைகளை முன்னின்று தீர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள். ஆனால் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? அவர்களும் இதற்குத் துணை போகிறார்களா? வடக்கில் சுமந்திரன் செய்வது போல, கிழக்கில் சாணக்கியன் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி, சிங்களமயமாக்கலுக்குத் துணை போகிறாரா? தமிழரசு கட்சி சார்பில் தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.”

“பாதிக்கப்பட்ட எல்லைப் பிரதேசங்களில் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டுமே இந்த மண்ணைப் பாதுகாக்க முடியும். நீங்கள் உங்கள் நிலங்களை விட்டு வெளியேறினால் நிலப்பரப்பு சுருங்கும். இதுதான் எதிரியின் விருப்பம். எல்லையில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் மட்டுமே அவர்கள் அங்கு நிலைத்து நிற்பார்கள்.

எமது அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால், முதலில் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் எங்குப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களோ, அங்கு நேரில் சென்று அந்தப் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்.

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்