மக்கள் தொகை கணக்கெடுப்பு: இறுதி அறிக்கையின் முக்கிய தகவல்கள்

இலங்கையின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதுடன், அது தொடர்பான பல விடயங்களைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்தக் கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,781,800 ஆகப் பதிவாகியுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 நபர்கள் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 28.1% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்ந்தும் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாகக் காணப்படுவதாகவும், மாவட்ட மட்டத்தில் அதிகூடிய மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் மக்கள் தொகை 2,436,142 ஆகப் பதிவாகியுள்ளதுடன், குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவு மாவட்டத்தில் 122,619 ஆகப் பதிவாகியுள்ளது.

2024-ஆம் ஆண்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 18.0% ஆகப் பதிவாகியுள்ளதுடன், சிறுவர் மக்கள் தொகை சதவீதம் 20.7% வரை குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நடுத்தர வயது 35 ஆண்டுகள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை விட 5 ஆண்டுகள் அதிகரிப்பாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின விகிதத்தை தேசிய மட்டத்தில் கருத்தில் கொள்ளும்போது, 100 பெண்களுக்கு 93.1 ஆண்கள் உள்ளனர். இது 2012-ஆம் ஆண்டில் காணப்பட்ட 93.8 என்ற நிலையை விடக் குறைந்த பெறுமதியாகும் என அந்த அறிக்கை காட்டுகிறது.

அதேபோல், மொத்த மக்கள் தொகையில் 41.8% பேர் ஒருபோதும் திருமணம் செய்யாதவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது 2012-ஆம் ஆண்டில் 30% ஆகக் காணப்பட்டதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

திருமணம் செய்யும் வயது தொடர்பிலும் குறித்த அறிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்களின் திருமண வயது 29.2 ஆண்டுகள் வரையும், பெண்களின் திருமண வயது 25.6 ஆண்டுகள் வரையும் உயர்ந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2012 அறிக்கையில் ஆண்கள் 27.2 மற்றும் பெண்கள் 23.4 எனப் பதிவாகியிருந்தது.

கைம்பெண் நிலை (Widowhood) தொடர்பில் பார்க்கையில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களிடையே பெண்களுக்கான விகிதம் 44.2% ஆகவும், ஆண்களுக்கான விகிதம் 10.5% ஆகவும் உயர்ந்துள்ளது. முன்னர் 2012-ஆம் ஆண்டில் இது பெண்களுக்காக 38.4% ஆகவும் ஆண்களுக்காக 8.6% ஆகவும் பதிவாகியிருந்தது.

இனம் மற்றும் மதம்

2024 மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இனம் மற்றும் மதம் தொடர்பாக பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையின் மக்கள் தொகையை இன ரீதியாகக் கருத்தில் கொள்ளும்போது, மிகப்பெரிய இனக்குழுவாக சிங்களவர்கள் உள்ளனர். இது எண்ணிக்கையில் 16,144,037 ஆகும், அதாவது மொத்த மக்கள் தொகையில் 74.12% எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 2,681,627 (12.31%) ஆகவும், இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை 2,283,246 (10.47%) ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இந்திய வம்சாவளித் தமிழர்களின் (மலையகத் தமிழர்கள்) எண்ணிக்கை 600,360 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2.76% சதவீதமாகும்.

ஏனைய இனக்குழுக்களில் பரங்கியர் 31,721, மலாயர் 26,650, இலங்கை செட்டி 2,443, பரதவர் 1,183 மற்றும் வேடர் 1,373 பேர் உள்ளடங்குகின்றனர். அத்துடன் ‘ஏனையவை’ என வகைப்படுத்தப்பட்டவர்கள் 9,160 பேர் உள்ளனர்.

மாகாண மட்டத்தில் பார்க்கும்போது, தென் மாகாணம் (94.8%), வடமத்திய மாகாணம் (90.5%), சப்ரகமுவ (86.5%), வடமேல் மாகாணம் (84.8%) மற்றும் மேல் மாகாணம் (83.6%) ஆகியவற்றில் சிங்கள மக்கள் அதிக சதவீதத்தில் பதிவாகியுள்ளனர். வட மாகாணத்தில் பெரும்பான்மையாக 91.5% இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை முஸ்லிம்கள் அதிகபட்சமாக 39.5% ஆக உள்ளதுடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் பிரதானமாக மத்திய மாகாணத்தில் 15% செறிந்து காணப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மத ரீதியான கட்டமைப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 69.8% பௌத்தர்களாகவும், 12.6% இந்துக்களாகவும், 10.7% இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். அத்துடன் 5.6% ரோமன் கத்தோலிக்கர்களும், 1.3% ஏனைய கிறிஸ்தவர்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கை காட்டுகிறது.

கல்வி மற்றும் எழுத்தறிவு

2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் கல்வி மட்டம் மற்றும் எழுத்தறிவு 2024-ஆம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, உயர் கல்விக்கான பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்களிடையே டிஜிட்டல் அறிவு வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பெரும்பாலானோர் (58.4%) இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுள்ளனர். இது இரு பாலினத்தவருக்கும் பொதுவான ஒரு பண்பாகக் காணப்படுவதுடன், மூன்றாம் நிலைக் கல்வி மட்டத்தில் ஆண்களை விடப் பெண்களின் சதவீதம் உயர்வாக உள்ளதென இந்த அறிக்கை காட்டுகிறது.

2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், பாடசாலைக்குச் செல்லாத அல்லது ஆரம்பக் கல்வியை மாத்திரம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2024-ல் கணிசமாகக் குறைந்துள்ளது.

25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 6,690,333 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் அல்லது அதற்கும் மேற்பட்ட தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் நிலைக் கல்வியைத் தமது உயர்ந்தபட்ச கல்வித் தகுதியாகக் குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை 2012-உடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது. அதன்படி, அந்தப் பெறுமதி 18.2% இலிருந்து 26.2% வரை அதிகரித்துள்ளதுடன், இங்கு ஆண்களை விடப் பெண்களின் முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் கணினி அறிவு 34.7% ஆகவும், டிஜிட்டல் அறிவு 67.6% என்ற உயர் மட்டத்திலும் காணப்படுகிறது. 20-24 வயதுப் பிரிவினர் அதிகூடிய கணினி அறிவைப் பதிவு செய்துள்ள அதேவேளை, 15-19 வயதுப் பிரிவினர் டிஜிட்டல் அறிவில் முன்னிலையில் உள்ளனர்.

அத்துடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களில் கூட 15% இற்கும் அதிகமானோர் டிஜிட்டல் அறிவைக் கொண்டுள்ளமை ஒரு சிறப்பான விடயமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-ஆம் ஆண்டளவில் இலங்கையின் வீடுகளின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், மண்ணெண்ணெய் மற்றும் விறகு பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டு அலகுகள்: 2024-ஆம் ஆண்டளவில் இலங்கையில் வசிப்பிடங்களைக் கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 6,030,541 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2012-உடன் ஒப்பிடுகையில் 822,801 அலகுகளின் வளர்ச்சியாகும்.

பிரிவு மற்றும் மாவட்ட ரீதியாக: மொத்த வீட்டு அலகுகளில் அதிகூடிய சதவீதம் கிராமப்புறங்களில் பதிவாகியுள்ளதுடன், நகர்ப்புற மற்றும் தோட்டத்துறைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாவட்ட ரீதியாக அதிகூடிய வீட்டு அலகுகள் கம்பஹா மாவட்டத்திலும், குறைந்த அளவு மன்னார் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

வீட்டு வகை மற்றும் உரிமை: இலங்கையில் பெரும்பாலானவை தனி வீடுகளாகும் (Single houses), அவற்றில் 82.2% ஒற்றை மாடி வீடுகளாகும். மேலும், 84.69% வீடுகளின் உரிமை அந்த வீடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமே இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

தனித்து வாழ்பவர்கள்: மொத்த வீட்டு அலகுகளில் 10.5% தனி நபர் வீடுகளாகப் பதிவாகியுள்ளன. இதன்படி, 640,704 பேர் தனித்து வசிப்பதுடன், அவர்களில் 370,229 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியோர்களாவர். இவர்களில் பெரும்பான்மையானோர் (71.3%) பெண்களாவர்.

வீடமைப்பு நிலை மற்றும் வாழ்க்கைத்தரம்

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வீடுகளின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், மண்ணெண்ணெய் மற்றும் விறகு பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வசிப்பிடங்களைக் கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 6,030,541 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 822,801 வீட்டு அலகுகளின் வளர்ச்சியாகும்.

மொத்த வீட்டு அலகுகளில் அதிகூடிய சதவீதம் கிராமப்புறங்களில் பதிவாகியுள்ளதுடன், நகர்ப்புற மற்றும் தோட்டத்துறைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாவட்ட ரீதியாக அதிகூடிய வீட்டு அலகுகள் கம்பஹா மாவட்டத்திலும், குறைந்த அளவு மன்னார் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் பெரும்பாலானவை தனி வீடுகளாகும் (Single houses), அவற்றில் 82.2% ஒற்றை மாடி வீடுகளாகும். மேலும், 84.69% வீடுகளின் உரிமை அந்த வீடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமே இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், இங்குள்ள மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நாட்டின் மொத்த வீட்டு அலகுகளில் 10.5% தனி நபர் வீடுகளாகப் பதிவாகியுள்ளமையாகும்.

இதன்படி, 640,704 பேர் தனித்து வசிப்பதுடன், அவர்களில் 370,229 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியோர்களாவர். இவர்களில் பெரும்பான்மையானோர் (71.3%) பெண்களாவர்.

வீட்டு அலகுகளில் 92.2% ஆனவை தமது வீட்டிற்குள் அல்லது வளவிற்குள் குடிநீர் வசதியைக் கொண்டுள்ளன. தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மூலம் மின்சாரம் பெறும் வீடுகளின் சதவீதம் 2012 இல் காணப்பட்ட 87.0% இலிருந்து 98.0% ஆக உயர்ந்துள்ளதுடன், மண்ணெண்ணெய் பயன்பாடு 1.6% ஆகக் குறைந்துள்ளது.

சமையலுக்காக 55.4% வீடுகள் விறகையும், 42.4% வீடுகள் எரிவாயுவையும் பயன்படுத்துகின்றன. 62% வீடுகள் வீட்டிற்குள்ளேயே சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளதுடன், 99.6% வீடுகள் நீர் முத்திரை கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன.

மேலும், 93.8% குடும்பங்கள் தமது பயன்பாட்டிற்காக அலைபேசிகளைக் கொண்டுள்ளதாக குறித்த அறிக்கை காட்டுகிறது.

சுகாதாரம் மற்றும் ஊனமுற்ற நிலை

இலங்கையின் சுகாதாரத் துறையில் ஒரு பிரதான சவாலாக தொற்றா நோய்களின் பரவல் தொடர்ந்தும் காணப்படுவதாக புதிய தரவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

3,223,413 நபர்கள் பல்வேறு மட்டத்திலான செயல்பாட்டு சிரமங்களால் (Functional difficulties) பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை காட்டுகிறது. இது மக்கள் தொகையில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 35 பேர் என்ற விகிதமாகும்.

2024 தரவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 19.2% (4.187 மில்லியன் நபர்கள்) தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுய-அறிக்கையிடப்பட்ட தகவல்களின்படி, அதிகளவிலான நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நோய்த்தாக்கங்கள் பிரதானமாக பெண்கள் மற்றும் முதியோர்களிடையே பதிவாகியுள்ளதுடன், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு நாட்பட்ட நோயினாலாவது பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கல்வி மட்டம் அதிகரிக்கும் போது தொற்றா நோய்கள் பதிவாவது படிப்படியாகக் குறைவதாகத் தரவுகள் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்திற்குள் சுகாதார அறிவு சார்ந்த இடைவெளி காணப்படுவது புலனாகுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இடப்பெயர்வு

இடப்பெயர்வு தொடர்பாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாவது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13% பேர் தமது பிறந்த இடத்திற்கு வெளியே வேறு பகுதிகளில் குடியேறிய வாழ்நாள் இடம்பெயர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகூடிய தேறிய குடியேற்றங்களைக் கொண்ட மாவட்டங்களாக கம்பஹா (357,528) மற்றும் கொழும்பு (191,524) பதிவாகியுள்ளதுடன், தற்போது இடம்பெயர்பவர்களின் பிரதான இலக்காக கம்பஹா மாவட்டம் மாறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் வாழ்நாள் ரீதியாக வெளியே இடம்பெயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், குருணாகல் மாவட்டத்திற்குள் இடம்பெயர்வதும் அங்கிருந்து வெளியேறுவதும் சம அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய வட மாகாண மாவட்டங்கள் நேர்மறையான வாழ்நாள் இடம்பெயர்வு முறையைக் காட்டுகின்றன. முன்னைய வதிவிட மாவட்டத்தின் அடிப்படையில் இடம்பெயர்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் 0.5 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்தோர் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியே இடம்பெயர்வோரின் விகிதமும் உயர் மட்டத்தில் காணப்படுவதுடன், மிகக் குறைந்த அளவில் வெளியே இடம்பெயர்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான உள்வரும் இடம்பெயர்வுகள் பதிவாகியுள்ளதுடன், தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ள வீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 672,249 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர், அதாவது 61.3% பேர் ஆண்களாவர்.

தொழிற்சக்தி மற்றும் வேலைவாய்ப்பு

இலங்கையின் தொழிற்சக்திக்குள் ஆண்களின் பங்களிப்பு முதன்மையான மட்டத்தில் காணப்படுவதுடன், பெண்களின் தொழிற்சக்தி பங்களிப்பு தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக இந்தப் புதிய தரவு அறிக்கை காட்டுகிறது.

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பில் வளர்ச்சி காணப்பட்டாலும், இளைஞர் வேலையின்மை தொடர்ந்தும் ஒரு பிரதான பிரச்சினையாகக் காணப்படுவதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்சக்தி பங்களிப்பு விகிதம் 47.3% ஆகும். இதில் ஆண்களின் பங்களிப்பு 67.4% என்ற உயர் மட்டத்தில் உள்ளது. எனினும், பெண்களின் பங்களிப்பு 28.9% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பான மக்கள் தொகையில் 68% பேர் ஆண்களாவர். பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்ற மக்கள் தொகையில் 70.6% பேர் பெண்களாவர்.

அதேபோல், வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.68 மில்லியன் ஆகும், அவர்களில் 69.3% பேர் ஆண்களாவர். ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 6% ஆகப் பதிவாகியுள்ளதுடன், 20-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் பிரிவினரிடையே அதிகூடிய வேலையின்மை காணப்படுவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வேலைவாய்ப்பு விகிதம் 94% ஆகவும் வேலையின்மை விகிதம் 6% ஆகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, வேலை செய்யும் வயதிலுள்ள மக்கள் தொகையில் 52% பேர் பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளது.

இதற்குப் பிரதான காரணங்களாக வீட்டுப் பொறுப்புகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் முதுமை அடைதல் போன்றவை அமைந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் விளக்கியுள்ளது.

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான