பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க முடியாது. பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என ஸ்ரீபோதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகரும், எம்பிலிபிட்டிய இங்குரஆர ஸ்ரீபோதிராஜ பிக்கு பயிற்சி மையத்தின் ஆன்மீகப் பணிப்பாளருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் சுமந்துதான் இவ்வுலகத்துக்கு வருகிறான். ஆனால், பிக்கு ஒரு நிலைப்பாட்டில் அந்த அனைத்து உரிமைகளையும் தியாகம் செய்துவிட்டுத்தான் சாசனக் கோட்பாட்டுக்குள்ளே நுழைகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் தனக்கிருந்த மனித உரிமைகளை நிராகரித்துவிட்டுத்தான் அவர் துறவறத்தை ஏற்கிறார்.

அவ்வாறு துறவறம் பூணும் ஒரு பிக்கு, அன்று முதல் மூன்று விதமான சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படுகிறார். முதலாவது, விநய பிடகத்தில் புத்த பெருமானால் விதிக்கப்பட்டுள்ள பிராதிமோட்ச விதிகள். இரண்டாவது, நாட்டின் இராஜ நீதி எனப்படும் அரச சட்டம். தான் ஒரு பிக்கு என்பதற்காக நாட்டின் சட்டத்திலிருந்து விலகிவிட முடியாது. பிக்குகள் அரச சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்ம நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது, சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விதிகள். இந்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் பிக்குகள் அடிபணிய வேண்டும்.

மனித உரிமைகளை நிராகரித்துவிட்டு துறவறத்துக்குள் நுழைந்த பிக்குவுக்கு இருப்பது சாதாரண மனித உரிமைகள் அல்ல, அது விடுதலை குறித்த உன்னதமான உரிமையாகும். தர்மத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாத ஒருவருக்கு, எந்த நேரத்திலும் துறவிக்கோலத்தை நீக்கிவிட்டுச் செல்லும் சுதந்திரம் உண்டு. ஏனைய மத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பௌத்த பிக்குவுக்கு இருக்கும் விசேட வரப்பிரசாதம் இதுவாகும். எனவே தனது ஆடையைக் களைந்து இல்லறத்துக்குத் திரும்புவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது.

பிக்குவானவர் தனக்கு விருப்பமானதைச் செய்துகொண்டு காவி உடையில் தங்கியிருக்க மனித உரிமைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் தான் சுயமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டே வாழ வேண்டும். வரலாற்றில் தர்ம சங்காயனைகளின் போது, தர்மத்தைப் பாதுகாப்பதற்காகத் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டனர். தர்மசோக மன்னன், வோஹாரிக திஸ்ஸ மன்னன் மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னன் போன்றோரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சாசனச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இவ்வாறான நடைமுறைகள் சரியாகச் செயற்படாத காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அரசாங்கம் தலையிட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையுடன் சாசனச் சீர்திருத்தங்களை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். அதுவே சாசனத்தின் அசிவிருத்திக்கு வழியாகும். மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, தமக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டு துறவற ஆடையில் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாதவர்கள் கௌரவமாக அதனை நீக்கிவிட்டு சாதாரண இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதை விடுத்து, மனித உரிமைக் கதைகளைக் கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது சாசனத்தின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக