பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு; அரசு வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுகிறது! – ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

கடந்த ஜனவரி 30ஆம் திகதி அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 200 வழங்கப்படவுள்ளது.

மொத்த அதிகரிப்பான 400 ரூபாயில், 200 ரூபாயை நிறுவனங்களும் மீதி 200 ரூபாயை அரசாங்கமும் நிதி உதவியாக வழங்கும். “முதலில் 2,138 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குவோம் என்று அரசாங்கம் உறுதியளித்தது.

அப்போது பணவீக்கம் 1.5% ஆக இருந்தது. தற்போது பணவீக்கம் 5% வரை உயர்ந்துள்ள நிலையில், 1,750 ரூபாயை மட்டும் வழங்குவது தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

“20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து இயங்காது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தர்ம ஸ்தாபனங்கள் அல்ல. நஷ்டம் எனக் கூறி மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் ஏன் இந்த நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது?” என அவர் சாடினார்.

இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. “என்னிடம் ஒப்பந்தத்தின் பிரதி உள்ளது.

நான் சொல்வது தவறென்றால் உண்மையான ஆவணத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்” என அவர் சவால் விடுத்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்டப்படி செல்லுபடியாகாது என அதில் ஒரு சரத்து இருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை உடனடியாகத் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி (Gazette) மூலம் அறிவித்து சட்டபூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பள உயர்வைக் காட்டி சில தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் அளவு 20 கிலோவிலிருந்து 26 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையான சம்பள உயர்வு அல்ல என அவர் குறிப்பிட்டார்.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்