புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

வட இந்திய மாநிலமான அசாம் – தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.‌

இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோட்சா கட்சி 21 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தனர்.

தென்னிந்திய மாநிலமான கேரளம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் குதித்திருப்பதால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக கட்சிக்கு வாக்காளர்கள் இடத்தில் ஆதரவு இருந்தாலும் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் நேரடியான மோதல் நடைபெறுகிறது.‌ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கு பற்றி தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிக்கும் நேரடியான போட்டி நிலவுகிறது. இங்கு புதிதாக தமிழக அரசியல் களத்தில் இறங்கி பாரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத கட்சியின் பிரபலங்கள் பலர் பல தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். விஜய், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் தங்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினர்.

மூன்று மாநிலங்களிலும் பொதுத் தேர்தலுக்காக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அசாம், கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் மக்கள் யாரை தெரிவு செய்வார்கள் என்பது எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அதிகாரபூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்