புதிய அரசியலமைப்பு; நடைமுறைக்குச் சாத்தியமில்லை – கலாநிதி சரத் அமுனுகம

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை’ எனும் நூல் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சுதந்திர இலங்கையில், சமஷ்டி தீர்வு பற்றி உரையாடலை பண்டாரநாயக்க ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் அந்த உரையாடல் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்ப்படைந்திருந்த நிலையில் தனி நாட்டை உருவாக்குவது பற்றியதாகவே இருந்தது. அத்துடன் வன்முறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்.

ஆயுதங்களை ஏந்திய தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாடு தான் இறுதியான தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அத்தகைய நிலைப்பாடுகளை உடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அந்தவகையில் பேராசிரியர் பீரிஸ் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டமையானது மிகவும் முக்கியமானது.

ஆனால் இறுக்கமான நிலைப்பாடுடைய ஒரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து அதன் ஊடாக தீர்வினை பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசைக்கு பொருத்தமானவராக இருந்தார். அவரால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய முழுமையான இயலுமை காணப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறானதொரு தரப்புடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானதொரு விடயம். அந்தப்பணியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செய்திருந்திருக்கின்றமை பாராட்டக்கூடிய விடயமாகும்.

ஆனால் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எந்த நம்பிக்கையுடன் இருந்தார் என்பது பற்றிய கேள்விகள் என்னிடத்தில் இன்னமும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஈற்றில் அவர்களின் நிலைப்பாட்டின் பிரகாரமே பதிலளிக்கப்பட்டது.

அதனை தவிர்க்க முடியாது. ஏனென்றால் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லாத தரப்பு ஈற்றில் தனது நிலைப்பாட்டாலேயே முடிவுக்கு வருவது இயற்கையானது. அது தான் புலிகளுக்கு நடந்தது.

தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதுபற்றிய உரையாடல்கள் காணப்பட்டாலும் செயற்பாடுகள் இல்லை. இதற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை முழுமையாக அமுலாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு கொள்ள முடியும். அதனைவிடுத்து ஒற்றையாட்சியை நீக்குகின்றோம், முறைமையை மாற்றுகின்றோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளும் நடைமுறையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விடயமாகும்.

ஆகவே தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.னடி கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு இவ்வாறான சில குழுக்கள் உதவியிருக்கலாம். அதன் காரணமாகவே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த நிலைமை தொடர்வது நாட்டுக்கு ஆபத்தானது என எச்சரிக்கின்றோம் என்றார்.

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை