புதிய அரசியலமைப்பு; இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைக்கத் தீர்மானம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும் அதனை மக்கள் மயப்படுத்தல் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு வரைவு தயாரித்தல் குழு, பிரசாரக் குழு மற்றும் மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழு ஆகிய 3 குழுக்களை நியமிப்பதற்கு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.

தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமென அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கமைய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக்கொண்ட 33 பேரடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு ஞாயிற்றுக்கிழமை (28) பி.ப 7.00 – 9.00 மணி வரை நிகழ்நிலை முறைமை ஊடாகக் கூடியது.

இக்கூட்டத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவினைத் தயாரிப்பதற்கு வரைவு தயாரித்தல் குழுவையும், இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரசாரக் குழுவையும், இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்டறிந்து, அவர்களது அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கான குழுவையும் நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி கு.குருபரன் கேசரியிடம் தெரிவித்தார்.

அதேவேளை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 33 பேரும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இந்த 3 குழுக்களுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்றும், அச்செயன்முறையை எதிர்வரும் ஒருவார காலத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் பின்னர் இந்தக் குழுக்கள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் அவற்றின் பணிகளை முன்னெடுத்துச்செல்லும் என்றார்.

அதேபோன்று மேற்குறிப்பிட்ட வரைவைத் தயாரிக்கும்போது அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியப் பேரவையினால் தயாரிக்கப்பட்ட வரைவு, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினரிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் கையளிக்கப்பட்ட வரைவு மற்றும் வடக்கு மாகாணசபை இயங்குநிலையில் இருந்தபோது தயாரிக்கப்பட்ட வரைவு ஆகிய மூன்றிலும் உள்ள ஏற்றுக்கொள்ளத்தக்க விடயங்களை உள்வாங்கி, புதிய வரைவைத் தயாரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் குருபரன் தெரிவித்தார்.

மேலும் அரசியல் தீர்வு குறித்து இவ்வரைவில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படைக்கோட்பாடுகள் குறித்து ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்படவேண்டியது அவசியம் என்ற விடயமும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.